செய்திகள் :

Rain Alert: 'சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்யும்'- அப்டேட் தந்த வானிலை ஆய்வு மையம்!

post image

கடந்த இரண்டு நாள்களாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக, வால்பாறை, மாஞ்சோலை (திருநெல்வேலி), கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பத்தூர், தேனி, நீலகிரி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்துள்ளது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, நெல்லை, குமரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்," சென்னையில் இரவு 10 மணி முதல் 11 மணி வரை தீவிரமான மேகவெடிப்பு போன்ற மழை பெய்தது. 2025ஆம் ஆண்டின் முதல் தீவிர வானிலை நிகழ்வு சென்னையில் நடந்துள்ளது. இன்று இரவும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" என்று தெரிவித்திருக்கிறார்.

Rain Alert - மழை
Rain Alert - மழை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 31-08-2025 முதல் 01-09-2025 வரை:தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

02-09-2025 முதல் 05-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சத்தீஸ்கர் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (43). இவருக்குத் திருமணம் முடிந்து பவித்ரா (40) என்ற மனைவியும், சௌஜைன்யா (7) மற்றும் சௌமையா (4) என இரு மகள்கள் இருக்கின்றனர். ராஜேஷ் குமார் சத்தீஸ்கர் மாநிலத்த... மேலும் பார்க்க

TN Rains: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை மையம் அறிக்கை

நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் மழை பெய்தது. ஆனால், காலை 10 மணிக்கு முன்பே, வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்த... மேலும் பார்க்க

சென்னை: ``50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பதிவு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று அதிகாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருக்கிறது. கிண்டி, அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் இடிய... மேலும் பார்க்க

மும்பை கனமழை: முடங்கிய புறநகர் ரயில் சேவை; அமிதாப்பச்சன் பங்களாவில் புகுந்த மழை வெள்ளம்

மும்பையில் கடந்த 4 நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் மையப் பகுதியில் ஓடும் மித்தி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோரம் ஏராளமான குடிசைகள் இருக்கின்றன. மித்தி ஆற்றில் ஏற்கனவே த... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப் போட்ட கனமழை; சாலைகளைச் சூழ்ந்த வெள்ளம்... இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்றுமுன் தினத்தில் இருந்து தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இக்கனமழை இன்று காலையில் மேலும் தீவிரம் அடைந்தது. இதனால் நகரில் பல சாலைகள் வெள்ளத்தி... மேலும் பார்க்க

Rain Alert: ``சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை" - அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

வருகிற 18-ம் தேதி (நாளை) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாகவே சென்னை... மேலும் பார்க்க