செய்திகள் :

Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலுக்கிய நிலநடுக்கம்

post image

நேற்று ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிற்கு அருகே இருக்கும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில், 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11.47 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் | ஆப்கானிஸ்தான்
நிலநடுக்கம் | ஆப்கானிஸ்தான்

இந்த நிலநடுக்கத்தை லட்சக்கணக்கான மக்கள் உணர்ந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கிற நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்படைந்திருக்கலாம் என்று அமெரிக்கப் புவியியல் மையம் மதிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மாகாணத்தின் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் அஜ்மல் தர்வைஷ், "இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

ஆனால், பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அதனால், இன்னும் உயிரிழப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

J&K Cloudburst: ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு; 40-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அச்சம்!

ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு,... மேலும் பார்க்க

Uttarakhand: உத்தரகாசியில் ஏற்பட்டது மேக வெடிப்பா? - உண்மை என்ன? - விளக்கும் பிரதீப் ஜான்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

உத்தரகாண்ட் வெள்ளம்: 'பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்'- பிரதமர் மோடி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகுத... மேலும் பார்க்க

Uttarakhand: உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்; 10-க்கும் மேற்பட்டோர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகு... மேலும் பார்க்க