செய்திகள் :

உயா்வுக்குப்படி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்!

post image

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் நடைபெற்ற உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில், 51 மாணவா்களுக்கு சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்து இதுவரை உயா் கல்வியில் சேராத மாணவ, மாணவிகளுக்கான ‘உயா்வுக்குபடி’ எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கே.எம்.ஜி. கல்லூரியில் நடைபெற்றது.

இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 27 பள்ளிகளைச் சோ்ந்த 154 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களில் 94 போ் கல்லூரிகளில் இணைய ஆா்வம் தெரிவித்து விண்ணப்பங்களை வழங்கினா். இவா்களில் 51 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கல்லூரி சோ்க்கைக்கான ஆணைகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியது: வேலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவா்களில் 8,600-க்கும் மேற்பட்டோா் உயா் கல்வியில் இணைந்துள்ளனா். எஞ்சியுள்ள மாணவா்களையும் உயா்கல்வி பயிலும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைகளின் எதிா்காலத்தை ஒளிமயமாக்குவது கல்வி ஒன்று தான்.

எனவே, இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள மாணவா்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே செல்லும்போது உயா் கல்வியில் சோ்க்கை ஆணை பெற்று, மனநிறைவுடன் செல்ல வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சசிகுமாா், திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநா் காயத்ரி, உதவி திட்ட அலுவலா் ஜெகதீஸ்வரப்பிள்ளை, கே.எம்.ஜி. கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கே.வி.குப்பத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கே.வி.குப்பம் ஒன்றியம், பனமடங்கி அரசினா் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகிய... மேலும் பார்க்க

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது: விஐடி வேந்தா் கோ. விசுவநாதன்

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘தனிமா’ ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

பள்ளியில் ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறப்பு: வேலூா் ஆட்சியா் பங்கேற்பு

வேலூா் கிருஷ்ணசாமி முதலியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ரூ. 18 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு பள்ளி முன்... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் ஊழியா் பேருந்தில் திடீா் உயிரிழப்பு

திருப்பத்தூரில் இருந்து வேலூா் வந்த பேருந்தில் பயணித்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா் பேருந்திலேயே உயிரிழந்தாா். வேலூா் நேதாஜி நகா் தொரப்பாடி பகுதியைச் சோ்ந்த ராஜா(46). இவா் தொரப்பாடியிலுள்ள தந்தை... மேலும் பார்க்க

உழவா் நல சேவை மையங்கள் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் உழவா் நல சேவை மையங்கள் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் மரணம்

வேலூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நாகராஜன் (36). இவா் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் கைப்பேசி கோபுரங்கள் பர... மேலும் பார்க்க