செய்திகள் :

கேதார்நாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: இருவர் பலி!

post image

கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோன்பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் இடையே முன்கட்டியா அருகே இன்று காலை காலை 7.34 மணிக்கு இந்த விபத்து நடந்தது.

முன்கட்டியா மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டதில் சாலையோரம் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தின் மீது மோதியதில், இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்தார்.

மேலும், வாகனத்தில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர், இருவர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று அவர் கூறினார்.

காயமடைந்தவர்கள் சோன்பிரயாக்கில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்குப் பலத்த காயமடைந்த இருவர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள பர்கோட்டைச் சேர்ந்த ரீட்டா (30) மற்றும் சந்திர சிங் (68) என இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் உத்தரகாசி மாவட்டத்தைச் சேர்ந்த மோஹித் சௌகான், நவீன் சிங் ராவத், பிரதிபா, மம்தா, ராஜேஸ்வரி மற்றும் பங்கஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உத்தரகண்டில் மழை சீற்றத்தால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தெஹ்ரி மற்றும் பித்தோராகர் மாவட்டங்களில் மழை தொடர்பான தனித்தனி சம்பவங்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 29 அதிகாலை உத்தரகாண்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் தொடர் மேக வெடிப்புகள் காரணமாக ஏற்பட்ட பேரழிவில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காணாமல் போயினர். இதனால் வீடுகள் சேதமடைந்து மக்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.

சாமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்கள் வெள்ளிக்கிழமை இயற்கை பேரழிவின் தாக்கத்தைச் சந்தித்தன. இந்த மழைக்காலங்களில் உத்தரகண்ட் இயற்கை பேரழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

A landslide on the Kedarnath national highway left two people dead and six others injured on Monday, an official said.

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

பெங்களுரூவில் காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்டுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டில் வசித்து வந்தவர் மென்பொறியாளர் ம... மேலும் பார்க்க

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

பிகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய வாக்குத் திருட்டு பிரச்னை மக்களிடையே எதிரொலிப்பதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்தார்... மேலும் பார்க்க

ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா

ஜம்முவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது பிக்ரம் சவுக் அருகே உள்ள தாவி பாலத்தில் நின்று ஆற்றங்கரையோரங்க... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் இருவர் பலி!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(... மேலும் பார்க்க

தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

மிகவும் கடினமான சூழலிலும் இந்தியாவும் ரஷியாவும் தோளோடு தோள் நின்று உதவியுள்ளதாக ரஷிய அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு... மேலும் பார்க்க

அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை: வானிலை ஆய்வு மையம்

ஏற்கனவே மழை, வெள்ளத்தால் திணறி வரும் வட இந்திய மாநிலங்களுக்கு அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பார்க்க