செய்திகள் :

பஞ்சாபில் வெள்ளம்: ஆளுநர், முதல்வரிடம் அமித் ஷா பேச்சு

post image

பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்வர் பகவந்த் மான் ஆகியோரை தொடர்புகொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.

பஞ்சாபில் உள்ள பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளத்தால் குருதாஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஹோஷியார்பூர் உள்ளிட்ட கிராமங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆகஸ்ட் மாதத்தில் பஞ்சாபில் 253.7 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 74 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவு மழை பெய்துள்ளது என்று தெரிவித்தனர்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எழுதிய கடிதத்தில், பஞ்சாப் கடந்த பல தசாப்தங்களில் கண்ட மிக மோசமான வெள்ள பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்! 250 பேர் பலி?

இந்த வெள்ளம் சுமார் 1,000 கிராமங்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்வர் பகவந்த் மான் ஆகியோரை தொடர்புகொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார் என்று அதிகாரிகள் கூறினர்.

அப்போது வெள்ள நிலையை சமாளிக்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இருவருக்கும் அவர் உறுதியளித்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Union Home Minister Amit Shah on Monday spoke to Punjab Governor Gulab Chand Kataria and Chief Minister Bhagwant Mann, and took stock of the flood situation in the state, officials said.

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் இருவர் பலி!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(... மேலும் பார்க்க

தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

மிகவும் கடினமான சூழலிலும் இந்தியாவும் ரஷியாவும் தோளோடு தோள் நின்று உதவியுள்ளதாக ரஷிய அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு... மேலும் பார்க்க

அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை: வானிலை ஆய்வு மையம்

ஏற்கனவே மழை, வெள்ளத்தால் திணறி வரும் வட இந்திய மாநிலங்களுக்கு அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் மனு: செப்.3ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை!

வாரணாசி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தாக்கல் செய்த மனு மீதான அடுத்த விசாரணை செப்டம்பர் 3-ஆம் தேதி அலாகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை நிர்ணயித்தது. ... மேலும் பார்க்க

கேதார்நாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: இருவர் பலி!

கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சோன்பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் இடையே முன்கட்டியா அருகே இன்று காலை கால... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு எஸ்சிஓ தலைவர்கள் கண்டன தீர்மானம்! பாகிஸ்தான் பிரதமரும்...

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவுள்ள 10 நாடுகளின் தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃ... மேலும் பார்க்க