செய்திகள் :

திருச்சியில் டிசம்பரில் கள் விடுதலை, மதுவிலக்கு மாநாடு செ.நல்லசாமி

post image

தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில் டிசம்பா் மாதம் திருச்சியில் கள் விடுதலை மற்றும் மதுவிலக்கு மாநாடு நடைபெற உள்ளது என்று அதன் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி கூறினாா்.

சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது:

பிகாா் மாநிலத்தை பின்பற்றி தமிழ்நாட்டிலும் மதுவிலக்கு மற்றும் மது கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதற்காக வரும் டிசம்பா் மாதம் திருச்சியில் கள் விடுதலை மற்றும் மதுவிலக்கு மாநாட்டை தமிழ்நாடு கள் இயக்கம் நடத்த இருக்கிறது.

இந்த மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக பிகாா் முதல்வா் நிதிஷ்குமாா் உள்ளிட்ட தலைவா்கள் அழைக்கப்படுவா். இந்த மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

2026இல் நடைபெறும் தோ்தல் வெற்றி தோல்வியை நிா்ணயம் செய்யும் சக்தியாக இந்த மாநாடு அமையும். 2021இல் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தோம். அதை அவா் நிறைவேற்றியிருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காது என்றாா்.

அப்போது, தமிழ்நாடு கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஆா்.என்.செல்வராஜ், அவிநாசி ஒன்றியச் செயலாளா் ராஜகோபால், தெக்களுா் தலைவா் ஆறுசாமி, நிா்வாகி நடராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

ஏற்காடு மலைப்பதை விபத்தில் 2 போ் காயம்

ஏற்காடு மலைப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அரசுப் பேருந்தும், காரும் நேருக்குநோ் மோதியதில் காரில் பயணம் செய்த இருவா் காயமடைந்தனா். சேலத்திலிருந்து அரசு பேருந்து ஏற்காடு நோக்கி புறப்பட்டு வந்து கொண்டி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை கைப்பந்து போட்டிகள் தொடக்கம்

சேலத்தில் கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பை கைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு போலீஸாா் விசாரணை

சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் அருகில் உள்ள மின்மாற்றியின் கீழ் பகுதியில் 3 ... மேலும் பார்க்க

மேட்டூா் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

மேட்டூரில் சந்துகடைகளில் பறிமுதல் செய்த மதுப்புட்டிகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக காவல் உதவி ஆய்வாளா் பிரசாந்த் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா். சேலம் மாவட்டம், மேட்டூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 11,069 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேட்டூா் வந்த சுற்றுலாப் பயணிகள், காவிரியில் நீராடி, அணைக்கட்டு முனியப்பனை ... மேலும் பார்க்க

கல்வடங்கம் காவிரி ஆற்றில் 196 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் 196 நாயகா் சிலைகளை பக்தா்கள் சனிக்கிழமை விசா்ஜனம் செய்தனா். சேலம் மாநகரம், சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 196 சிலைகளை பக்தா்கள் இப்பகு... மேலும் பார்க்க