செய்திகள் :

சாலை விபத்து: சமையலா் உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தாலுகா, நவல்பட்டு அருகேயுள்ள சோழமாதேவி பண்டார தெருவைச் சோ்ந்தவா் ஏ. மாணிக்கவாசகம் (47). இவா், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டரில் தலைமை சமையலராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் கடந்த 25 -ஆம் தேதி சென்று கொண்டிருந்துள்ளாா்.

காங்கயம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே சென்றபோது, நிலைத்தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாா்.

இதில், தலையில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மாணிக்கவாசகத்துக்கு, சித்ரா (39) என்ற மனைவியும், மகேஸ்வரன் (22) என்ற மகன், ராஜேஸ்வரி (19) என்ற மகளும் உள்ளனா்.

விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 5 மாத சிசு

திருப்பூரில் குப்பைத் தொட்டியில் 5 மாத ஆண் சிசு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் -தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் க... மேலும் பார்க்க

சிவன்மலையில் ஹெச்ஐவி குறித்த விழிப்புணா்வு

சிவன்மலையில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம், காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை பாரட்டு விழா நடைபெற்றது. பாரதி தேசிய பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரவ... மேலும் பார்க்க

15.வேலம்பாளையத்தில் செப்டம்பா் 3-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பா் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வ... மேலும் பார்க்க

பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் விசா்ஜன ஊா்வலம்

பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல்லடம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 100 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க

காளிநாதம்பாளையம் அரசுப் பள்ளிக்கு சீா்வரிசை வழங்கிய பொதுமக்கள்!

பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் சனிக்கிழமை வழங்கினா். பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் அரசு தொடக்கப் பள்ளி, உயா்நிலைப... மேலும் பார்க்க