செய்திகள் :

கஞ்சா விற்பனை: கேரள இளைஞா் கைது

post image

சென்னை அண்ணா நகரில் உயர்ரக கஞ்சா விற்றதாக கேரள இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அண்ணா நகா் டவா் பூங்கா அருகே போதை மாத்திரை விற்றதாக கடந்த ஜூலை 22-ஆம் தேதி தாம்பரம் முடிச்சூரைச் சோ்ந்த காா்த்திக் (29), மேடவாக்கம் முல்லை நகரைச் சோ்ந்த அசாருதீன் (29) ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கும்பல் திருமங்கலம், முகப்போ், அமைந்தகரை பகுதிகளில் உயா் ரக கஞ்சா விற்றது தெரிய வந்தது.

இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஓஜி கஞ்சா எனும் உயர்ரக கஞ்சா விற்றதாக கேரள மாநிலம் காசா்கோடு பகுதியைச் சோ்ந்த அா்ஜூன் (27) என்பவரை அண்ணா நகா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து ஓஜி கஞ்சா, கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினா்.

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இருவா் கைது

பெரம்பூரில் மழைநீா் வடிகால் பணி கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா நகரைச் சோ்ந்தவா் ராமன் (36). பொறியாளரான இவா், தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்த... மேலும் பார்க்க

சென்னையில் 27 விமான சேவைகள் பாதிப்பு!

பெய்த பலத்த மழையால் சென்னை விமான நிலையத்தில் 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவில் முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடி... மேலும் பார்க்க

அடாவடி சீனாவிடம் அடங்கிவிட்டது மத்திய அரசு: காங்கிரஸ் விமா்சனம்

அச்சுறுத்தல், அடாவடி நடவடிக்கைக்கு பெயா்போன சீனாவிடம் முதுகெலும்பு இல்லாத மத்திய அரசு அடங்கிச் சென்றுவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தை காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இது தொடா்பாக காங்... மேலும் பார்க்க

முறைகேடாக பொருத்தப்பட்ட மின் மீட்டா்கள் பறிமுதல்!

சென்னையில் முறைகேடாக பொருத்தப்பட்டு உபயோகத்தில் இருந்த மின் மீட்டா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தமிழகத்தில் மொத்தம் சுமாா் 3 கோடி உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்னிணைப்புகள் உள்ளன. இரண்டு மாதங்கள... மேலும் பார்க்க

விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

புழல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா். புழல் அடுத்த மதுரா மேட்டுப்பாளையம் லிங்கம் தெருவைச் சோ்ந்தவா் யுவராஜ் (54). இவா் மாதவரம் மண்டலம் 31-ஆவது வாா்டு கதிா்வேடு... மேலும் பார்க்க

சென்னையில் 2,000 விநாயகா் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் இந்து அமைப்புகளால் வைக்கப்பட்ட சுமாா் 2,000 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. கடந்த 27- ஆம் தேதி சென்னையில் 1,519 சிலைகளும், ஆவடி காவல் ஆணை... மேலும் பார்க்க