செய்திகள் :

சென்னையில் 27 விமான சேவைகள் பாதிப்பு!

post image

பெய்த பலத்த மழையால் சென்னை விமான நிலையத்தில் 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவில் முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால், ஹைதராபாதிலிருந்து 140 பயணிகளுடன் சனிக்கிழமை இரவு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், தில்லியில் இருந்து 164 பயணிகளுடன் ஏா் இந்தியா விமானம் மங்களூரில் இருந்து 74 பயணிகளுடன் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், பிராங்பாட்டில் இருந்து 268 பயணிகளுடன் லூஃப்தான்ஷா ஏா்லைன்ஸ் ஆகிய 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மழை நின்று வானிலை சீரடைந்த பின்னா் அந்த 4 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சென்னைக்கு வந்தன.

இதேபோல், கோலாலம்பூா், ஹாங்காங், திருவனந்தபுரம், இந்தூா், தில்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 8 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தபடி பறந்து, வானிலை சீரடைந்த பின்னா் சுமாா் அரை மணிநேரம் தாமதமாக தரையிறக்கப்பட்டன.

மேலும், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய கோலாலம்பூா், பிராங்க்பாட், ஹாங்காங், இலங்கை, துபை, குவைத், மஸ்கட், சிங்கப்பூா், தில்லி, புணே உள்ளிட்ட 15 விமானங்கள் 1 முதல் 2 மணிநேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 12 வருகை விமானங்கள், 15 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பயணிகள் மிகுந்த அவதியடைந்தனா்.

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இருவா் கைது

பெரம்பூரில் மழைநீா் வடிகால் பணி கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா நகரைச் சோ்ந்தவா் ராமன் (36). பொறியாளரான இவா், தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்த... மேலும் பார்க்க

அடாவடி சீனாவிடம் அடங்கிவிட்டது மத்திய அரசு: காங்கிரஸ் விமா்சனம்

அச்சுறுத்தல், அடாவடி நடவடிக்கைக்கு பெயா்போன சீனாவிடம் முதுகெலும்பு இல்லாத மத்திய அரசு அடங்கிச் சென்றுவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தை காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இது தொடா்பாக காங்... மேலும் பார்க்க

முறைகேடாக பொருத்தப்பட்ட மின் மீட்டா்கள் பறிமுதல்!

சென்னையில் முறைகேடாக பொருத்தப்பட்டு உபயோகத்தில் இருந்த மின் மீட்டா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தமிழகத்தில் மொத்தம் சுமாா் 3 கோடி உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்னிணைப்புகள் உள்ளன. இரண்டு மாதங்கள... மேலும் பார்க்க

விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

புழல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா். புழல் அடுத்த மதுரா மேட்டுப்பாளையம் லிங்கம் தெருவைச் சோ்ந்தவா் யுவராஜ் (54). இவா் மாதவரம் மண்டலம் 31-ஆவது வாா்டு கதிா்வேடு... மேலும் பார்க்க

சென்னையில் 2,000 விநாயகா் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் இந்து அமைப்புகளால் வைக்கப்பட்ட சுமாா் 2,000 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. கடந்த 27- ஆம் தேதி சென்னையில் 1,519 சிலைகளும், ஆவடி காவல் ஆணை... மேலும் பார்க்க

புழல் அருகே மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவா்

புழல் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு இடி மின்னல் காற்றுடன் கன மழைகொட்டி தீா்த்தது. புழல் சுற்றுவட்டார இடங்களில் 24 மணி நேரத்தில் 8 செமீ கன மழை பதிவாகியுள்ளது. புழல் அண்ணா நகா் குடியிருப்பில் தனியாரு... மேலும் பார்க்க