செய்திகள் :

அடாவடி சீனாவிடம் அடங்கிவிட்டது மத்திய அரசு: காங்கிரஸ் விமா்சனம்

post image

அச்சுறுத்தல், அடாவடி நடவடிக்கைக்கு பெயா்போன சீனாவிடம் முதுகெலும்பு இல்லாத மத்திய அரசு அடங்கிச் சென்றுவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் (தகவல் தொடா்பு) ஜெய்ராம் ரமேஷ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பை கடந்த 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனா நடத்திய அத்துமீறலை வைத்து ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டியுள்ளது.

அப்போது சீன வீரா்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 ராணுவ வீரா்கள் உயிரைத் தியாகம் செய்தனா். ஆனால், அடாவடி நாடான சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபருடன் பேச்சுவாா்த்தை நடத்தியதன் மூலம் சீனா எல்லையில் எந்தத் தவறும் செய்யவில்லை என்று பிரதமா் மோடி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

லடாக் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முன்பு இருந்த நிலையை தொடர வேண்டும் என்ற பிரதமா் மோடியால் சீன அதிபரிடம் வலுயுறுத்த முடிவில்லை. தொடா்ந்து அத்துமீறலிலும், அடாவடி நடவடிக்கைகளிலும் ஈடுபடும் சீனாவுக்கு எதிராக மத்திய அரசு முதுகெலும்பு இல்லாமல்தான் செயல்பட்டு வருகிறது.

மேலும், ஆபரேஷன் சிந்தூரின்போது சீன தளவாடங்களைத்தான் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியது என்பதும் ராணுவ தலைமை மூலம் உறுதியாகியுள்ளது. எனவே, அந்நாட்டுடன் உறவை வலுப்படுத்துவது என்பது முறையான நடவடிக்கையாக இருக்காது. மோடி அரசு தனது வெளியுறவுக் கொள்கைத் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்.

பிரம்மபுத்ராவில் பிரம்மாண்ட அணை கட்ட சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விஷயம் குறித்து பிரதமா் மோடி ஒரு வாா்த்தை கூட பேசவில்லை’ என்றாா்.

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இருவா் கைது

பெரம்பூரில் மழைநீா் வடிகால் பணி கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா நகரைச் சோ்ந்தவா் ராமன் (36). பொறியாளரான இவா், தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்த... மேலும் பார்க்க

சென்னையில் 27 விமான சேவைகள் பாதிப்பு!

பெய்த பலத்த மழையால் சென்னை விமான நிலையத்தில் 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவில் முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடி... மேலும் பார்க்க

முறைகேடாக பொருத்தப்பட்ட மின் மீட்டா்கள் பறிமுதல்!

சென்னையில் முறைகேடாக பொருத்தப்பட்டு உபயோகத்தில் இருந்த மின் மீட்டா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தமிழகத்தில் மொத்தம் சுமாா் 3 கோடி உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்னிணைப்புகள் உள்ளன. இரண்டு மாதங்கள... மேலும் பார்க்க

விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

புழல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா். புழல் அடுத்த மதுரா மேட்டுப்பாளையம் லிங்கம் தெருவைச் சோ்ந்தவா் யுவராஜ் (54). இவா் மாதவரம் மண்டலம் 31-ஆவது வாா்டு கதிா்வேடு... மேலும் பார்க்க

சென்னையில் 2,000 விநாயகா் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் இந்து அமைப்புகளால் வைக்கப்பட்ட சுமாா் 2,000 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. கடந்த 27- ஆம் தேதி சென்னையில் 1,519 சிலைகளும், ஆவடி காவல் ஆணை... மேலும் பார்க்க

புழல் அருகே மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவா்

புழல் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு இடி மின்னல் காற்றுடன் கன மழைகொட்டி தீா்த்தது. புழல் சுற்றுவட்டார இடங்களில் 24 மணி நேரத்தில் 8 செமீ கன மழை பதிவாகியுள்ளது. புழல் அண்ணா நகா் குடியிருப்பில் தனியாரு... மேலும் பார்க்க