செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் கேள்வி: சீமான் விமர்சனம்!

post image

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் குறித்து கேட்கப்பட்டு கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருக்கும் , நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று(ஜூலை 16) திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது.

நீதிபதி கோபிநாத் முன்னிலையில் நடந்த விசாரணையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 19 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

விவசாயிகளும் ஆசிரியர்களும் சாலையில் வந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக ஆட்சியாளர்கள் வீடுவீடாக செல்வதாகக் கூறுகிறார்கள்.

பாசிச பாஜக அரசின் கொள்கைகளில் இருந்து திமுக அரசு எந்த விதத்தில் மாறுபடவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வில் அரசியல் கேள்விகள் கேட்கக்கூடாது என அதன் தலைவர் கூறுகிறார். ஆனால் விடியல் பயணம் எப்போது தொடங்கப்பட்டது என கேட்கப்பட்ட கேள்வி அரசியல் கேள்வியா? இல்லையா?

திமுகவினர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபடுகிறார்கள்.

வரும் 2026-க்குப் பிறகும் இரண்டாடுகள் பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருக்கும் என்பதால், பாஜகவுடன் இணங்கி செல்ல வேண்டும் என்பதற்காக பாஜக கருத்துக்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்” என்றார்.

பயத்தின் காரணமாக அப்படி பேசுகிறாரா என்கிற கேள்விக்கு ”அதீத துணிச்சல் காரணமாக அவ்வாறு பேசுகிறார்” என கிண்டலாக சீமான் பதிலளித்தார்.

இதையும் படிக்க: நிமிஷாவுக்கு மன்னிப்புக் கிடையாது! கொல்லப்பட்டவரின் சகோதரர் திட்டவட்டம்!

Naam Tamilar Party coordinator Seeman criticized the question asked about Vidail's journey in the TNPSC exam.

“காமராசர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன்” - திருச்சி சிவா

பெருந்தலைவர் காமராசரைப் ப்ற்ரி திமுக எம்.பி. திருச்சி சிவா பேசிய கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தநிலையில், இதற்கு விளக்கமளித்து தன் நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார் திருச்சி சிவா. திருச்சி ... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் பூச்சு: மருத்துவரைக் கைது செய்து விசாரணை!

சேலம்: முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றிய விவகாரத்தில் மருத்துவர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் ம... மேலும் பார்க்க

நெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ! சாலைகளைப் பயன்படுத்தத் தடை!

திருநெல்வேலி ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்பட்டுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதால் அப்பகுதியில் உள்ள சாலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேல... மேலும் பார்க்க

காமராஜர் மீது காங்கிரஸுக்கும் தீராக் காழ்ப்பு! திருச்சி சிவா பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முன்னாள் முதல்வர் காமராஜருக்காக அனைத்து அரசு பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதியை கருணாநிதி கொண்டு வந்ததாகவும், நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதிதான் காப்பாற்ற வேண்டுமென்றும் காமராஜர் கோரியதாக திம... மேலும் பார்க்க

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்டுள்ளது.இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓ... மேலும் பார்க்க

மோடிக்கு கறுப்பு பலூன் காட்டிய ஸ்டாலின் வெள்ளைக் குடை பிடிக்கிறார்! இபிஎஸ் விமர்சனம்

பாஜகவிடம் அதிமுகவுக்கு பயம் என்று அதிமுகவை முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி பிரச... மேலும் பார்க்க