செய்திகள் :

இனி அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் ரூ.200 மட்டுமே! ஆனால் இங்கில்லை..

post image

கர்நாடகத்தில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறித்து பொதுமக்களிடம் அம்மாநில அரசு கருத்துக்கேட்பு நடத்தப்படவுள்ளது.

வாரம் முழுவதும் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் சாமானியர்களுக்கு வார இறுதி நாள்களில் புத்துணர்ச்சி தருவதில் சினிமாவும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், திரையரங்குகளில் படத்துக்கான டிக்கெட் விலை நாளுக்கேற்றவாறு மாறுவது மட்டுமல்லாமல், சில திரையரங்குகளில் அதிக விலையும் நிர்ணயிப்பது சினிமா ரசிகர்களுக்கு பெருந்துயரை அளித்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் அனைத்து வகையான திரையரங்குகளிலும் ஒரே மாதிரியான டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட்டுள்ள கர்நாடக அரசு, இதன் மீது 15 நாள்களில் பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பணிபுரிவதால், பெங்களூரில் பல மொழித் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

ஆனால், திரையரங்குகளில் டிக்கெட்டின் கட்டணம் வார நாள்களில் ஒரு விலையிலும், வார இறுதியில் ஒரு விலையிலும், புதிய படங்கள் வெளியீட்டின்போது ஒரு விலையிலும் நிர்ணயிக்கின்றனர். இதனால், சினிமா ரசிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாய்த் தெரிகிறது. ஐமேக்ஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் ஒரு படத்துக்கு ரூ.600 முதல் ரூ.1000 வரையில் டிக்கெட் விலை நிர்ணயிக்கின்றனர்.

இந்த நிலையில்தான், கர்நாடகத்தில் அனைத்து மொழிப் படங்களுக்கான மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான திரையரங்குகளிலும், பொழுதுபோக்கு வரி உள்பட அனைத்தும் சேர்த்து ரூ.200-க்குள் தான் கட்டணம் வசூலிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கருத்துக்கேட்புக்குப் பிறகு, அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து, அதனை கர்நாடக அரசு சட்டமாகக் கொண்டு வரும்.

Movie ticket prices will not go above ₹200 in Karnataka anymore

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உ... மேலும் பார்க்க

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல் - கண்ணீா் புகை குண்டு வீச்சு

புவனேசுவரம், ஜூலை 16: ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் ... மேலும் பார்க்க