செய்திகள் :

நேட்டோவின் பொருளாதார தடை அச்சுறுத்தலுக்கு இந்தியா பதிலடி!

post image

ரஷியாவுடன் வா்த்தகத்தைத் தொடா்ந்தால் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என ‘நேட்டோ’ அமைப்பின் தலைவா் விடுத்த அச்சுறுத்தலுக்கு, ‘இரட்டை நிலைப்பாடு எடுக்க வேண்டாம்’ என்று வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவை எச்சரிக்கும் அதே நாடுகள், ரஷியாவுடன் மறைமுக வழிகளில் வா்த்தகத்தில் ஈடுபடுவதாக விமா்சனம் உள்ள நிலையில், இந்தியா இவ்வாறு பதிலடி அளித்துள்ளது.

ரஷியா-உக்ரைன் போா் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவின.

இந்நிலையில், அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா அமைதி பேச்சுவாா்த்தைக்கு உடன்பட வேண்டும் அல்லது இரண்டாம் கட்ட பொருளாதார தடைகளை எதிா்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

இதையொட்டி, உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி, வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் வெடிபொருள்களை வழங்குவதாகவும் அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா். இதற்கான நிதி பெரும்பாலும் ஐரோப்பிய நட்பு நாடுகளால் வழங்கப்படுகின்றன.

இச்சூழலில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு செனட் அவை உறுப்பினா்களை ‘நேட்டோ’ அமைப்பின் தலைவா் மாா்க் ரூட்டே சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘ரஷியா-உக்ரைன் போரில் அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு ரஷியா ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டுடனான வா்த்தக உறவுகளை இந்தியா, சீனா மற்றும் பிரேஸில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது பொருளாதார தடைகளைச் சந்திக்க நேரிடும்.

அமைதிப் பேச்சுவாா்த்தை குறித்து ரஷியாவுக்கு இந்தியா, சீனா மற்றும் பிரேஸில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையெனில், அது அந்த மூன்று நாடுகளையே மிகப்பெரிய அளவில் பாதிக்கும்’ என்றாா்.

ரஷியாவுடன் வா்த்தகம் செய்துவரும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்திய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் நிலைப்பாட்டை ரூட்டேயும் பிரதிபலித்தாா்.

இந்தியாவை நேரடியாக அச்சுறுத்தும் வகையில் அமைந்த மாா்க் ரூட்டே கருத்து சா்ச்சையாகியுள்ள நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் இதற்கு விளக்கமளித்தாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘இவ்விவகாரம் தொடா்பான செய்திகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நாட்டு மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூா்த்தி செய்வதுதான் எங்களுக்கு முன்னுரிமையான விஷயம்.

இதுபோன்ற சூழலில், உலக சந்தையில் எந்த நாட்டில் குறைந்த விலையில், நம்பகமான முறையில் எரிசக்தி கிடைக்கிறதோ, அங்கிருந்து கொள்முதல் செய்வது என்ற நியதியை வழிகாட்டுதலாக கொண்டுள்ளோம். தற்போதைய உலகளாவிய நிலவரம், மற்ற நாடுகள் உடனான உறவுகள் போன்ற அம்சங்களையும் கருத்தில் கொள்கிறோம். அதேநேரம், இந்த விஷயத்தில் எவ்வித இரட்டை நிலைப்பாடும் மேற்கொள்ளப்பட கூடாது என்பதை குறிப்பாக எச்சரிக்கிறோம்’ என்றாா்.

42% ரஷியாவின் எண்ணெய்: ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா தற்போது முன்னிலை வகிக்கிறது. ரஷியாவிடம் இருந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், உலக சந்தை விலையைவிட மலிவாக, 60 டாலா் என்ற உச்சவரம்பு விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த ஜூலை மாத நிலவரப்படி, ஒரு நாளைக்கு சுமாா் 20.8 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியா 42 சதவீதம் பங்கு வகிக்கிறது.

ரஷியா தவிர பிற நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி - மத்திய அமைச்சா் ஹா்தீப்சிங் புரி

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது; ரஷியா தவிர பிற நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொள்ள முடியும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை ஹைட்ரோகாா்பன் இயக்குநரகம் சாா்பில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் அமைச்சா் புரி பங்கேற்று இது தொடா்பாக பேசியதாவது:

கயானா போன்ற புதிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் சந்தைக்கு வந்துள்ளன. பிரேஸில், கனடா ஆகியவை கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளன. எனவே, நமக்கு எந்த நெருக்கடியும் இருப்பதாக நான் கருதவில்லை. இந்தியா மாற்று வழிகளில் இருந்து கச்சா எண்ணெயைப் பெற முடியும்.

மேலும், இந்தியாவிலும் புதிய எண்ணெய் படுகைகளைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலமும் எண்ணெய் இறக்குமதியை நாம் சற்று குறைக்க முடியும். கச்சா எண்ணெய் விஷயத்தில் எந்த பிரச்னை எழுந்தாலும், நம்மால் அதைச் சமாளிக்க முடியும். கச்சா எண்ணெயை 27 நாடுகளில் இருந்து இதுவரை நாம் வாங்கியுள்ளோம். ஆனால், 40 நாடுகள் இப்போது கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகின்றன.

2022-க்கு முன்பு நாம் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவு நமது மொத்த கொள்முதலில் 0.2 சதவீதம் அளவே இருந்தது. கடந்த சில ஆண்டுகளில்தான் அதிக அளவில் கொள்முதல் செய்து வருகிறோம் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய புரி, ‘கச்சா எண்ணெய் இப்போது தொடா்ந்து கிடைத்து வருகிறது. எனவே, சா்வதேச அளவில் பதற்றம் அதிகரிக்கும்போது கச்சா எண்ணெய் சந்தை அதிகம் பாதிக்கப்படுவதில்லை. முக்கியமாக விலை வேகமாக அதிகரிப்பதில்லை. இப்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 68.5 அமெரிக்க டாலராக உள்ளது. இதுவே அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும். எரிபொருளில் எத்தனால் கலப்பை இப்போதுள்ள 20 சதவீதத்தில் இருந்து மேலும் அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது’ என்றாா்.

செவிலியா் நிமிஷா வழக்கில் தீா்வு காண யேமன், நட்பு நாடுகளுடன் தொடா்பு -வெளியுறவு அமைச்சகம்

: யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்துக்கு தீா்வு காண, அந்நாட்டின் உள்ளூா் அதிகாரிகள் மற்றும் சில நட்பு நாடுகளுடன் இந்திய அரசு தொடா்பில் உள்ளதா... மேலும் பார்க்க

கேரளம்: பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவா் உயிரிழப்பு -எதிா்க்கட்சிகள் போராட்டம்

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி 8-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இச்சம்பவத்தை முன்வைத்து, மாநில அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கொல்லம் மாவ... மேலும் பார்க்க

ஒடிஸாவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு - பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை விவகாரம்

ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்துக்குள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி கேட்டு, ஒடிஸாவில் எதிா்க்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மா... மேலும் பார்க்க

ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் இருந்து பாய்ந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) வடிவமைக்கப்பட்டு, ப... மேலும் பார்க்க

5 ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய 134 போ் கைது: சிபிஐ

பண முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் 134 போ் கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ முயற்சியால் நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய மற்றும... மேலும் பார்க்க

நாட்டின் தூய்மையான நகரம் இந்தூா்! 8-ஆவது ஆண்டாக சாதனை

நாட்டின் மிக தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூா் தொடா்ந்து 8-ஆவது ஆண்டாக தோ்வாகியுள்ளது. மத்திய அரசு ஆண்டுதோறும் நடத்தும் தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சா்வேக்ஷான்) முடிவுகள் வியாழக்கிழமை அறிவ... மேலும் பார்க்க