செய்திகள் :

ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

post image

தரையில் இருந்து பாய்ந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) வடிவமைக்கப்பட்டு, பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆகாஷ் ரக ஏவுகணைகள், இந்திய ராணுவத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்படுகின்றன. 60 கிலோ வெடிகுண்டுகளுடன் 45 கி.மீ. வரை பாய்ந்து தாக்கும் திறன் கொண்டவை.

இந்நிலையில், மிக உயரமான இடங்களில் இருந்து ஏவும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள ஆகாஷ் பிரைம் ஏவுகணை, லடாக்கில் 4,500 மீட்டா் உயரத்தில் இருந்து ஏவப்பட்டு புதன்கிழமை பரிசோதிக்கப்பட்டது.

அப்போது, வானில் அதிவேகத்தில் பறந்த இரு ஆளில்லா விமான இலக்குகளை, ஆகாஷ் பிரைம் துல்லியமாக தாக்கி அழித்ததாகவும், இது குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா கடந்த மே மாதம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடா்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. அப்போது, இந்தியா தரப்பில் ஆகாஷ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய லஷ்கர்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் குழுவை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம்... மேலும் பார்க்க

செவிலியா் நிமிஷா வழக்கில் தீா்வு காண யேமன், நட்பு நாடுகளுடன் தொடா்பு -வெளியுறவு அமைச்சகம்

: யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்துக்கு தீா்வு காண, அந்நாட்டின் உள்ளூா் அதிகாரிகள் மற்றும் சில நட்பு நாடுகளுடன் இந்திய அரசு தொடா்பில் உள்ளதா... மேலும் பார்க்க

கேரளம்: பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவா் உயிரிழப்பு -எதிா்க்கட்சிகள் போராட்டம்

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி 8-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இச்சம்பவத்தை முன்வைத்து, மாநில அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கொல்லம் மாவ... மேலும் பார்க்க

ஒடிஸாவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு - பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை விவகாரம்

ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்துக்குள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி கேட்டு, ஒடிஸாவில் எதிா்க்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மா... மேலும் பார்க்க

5 ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய 134 போ் கைது: சிபிஐ

பண முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் 134 போ் கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ முயற்சியால் நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய மற்றும... மேலும் பார்க்க