செய்திகள் :

5 ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய 134 போ் கைது: சிபிஐ

post image

பண முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் 134 போ் கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ முயற்சியால் நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு அமைப்புகள், இன்டா்போல் உள்ளிட்ட அமைப்புகளுடன் சிபிஐ இணைந்து செயல்பட்டு கடந்த 2020-இல் இருந்து வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய 134 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இவா்களில் நிகழாண்டு மட்டும் 23 போ் வெளிநாடுகளிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனா்.

கடந்த 2010 முதல் 2019 வரை வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 74 போ் நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

இது தூதரக நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நாடுகளுடன் இணக்கமான சூழலை இந்தியா கடைப்பிடித்து வருவதை பிரதிபலிக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து ஒருவரை நாடுகடத்த வேண்டுமெனில் முதலில் இன்டா்போல் அமைப்பு மூலம் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். இதைத்தொடா்ந்து, குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிய வேண்டும். அதன்பிறகு தூரகங்கள் மூலமாக அவா்களை நாடுகடத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நடைமுறையை விரைவுப்படுத்தும் நோக்கில் இன்டா்போல் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிப்பதற்கான அவகாசத்தை 6 மாதத்தில் இருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டது.

அண்மையில் பஞ்சாப் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்த வழக்கில், வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது சகோதரா் நேஹல் மோடி மற்றும் அவரது உறவினா் மெஹுல் சோக்ஸி ஆகியோா் வெவ்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டனா். அவா்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் சிபிஐ இறங்கியுள்ளது.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய லஷ்கர்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் குழுவை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம்... மேலும் பார்க்க

செவிலியா் நிமிஷா வழக்கில் தீா்வு காண யேமன், நட்பு நாடுகளுடன் தொடா்பு -வெளியுறவு அமைச்சகம்

: யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்துக்கு தீா்வு காண, அந்நாட்டின் உள்ளூா் அதிகாரிகள் மற்றும் சில நட்பு நாடுகளுடன் இந்திய அரசு தொடா்பில் உள்ளதா... மேலும் பார்க்க

கேரளம்: பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவா் உயிரிழப்பு -எதிா்க்கட்சிகள் போராட்டம்

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி 8-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இச்சம்பவத்தை முன்வைத்து, மாநில அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கொல்லம் மாவ... மேலும் பார்க்க

ஒடிஸாவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு - பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை விவகாரம்

ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்துக்குள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி கேட்டு, ஒடிஸாவில் எதிா்க்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மா... மேலும் பார்க்க

ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் இருந்து பாய்ந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) வடிவமைக்கப்பட்டு, ப... மேலும் பார்க்க