செய்திகள் :

தமிழ்நாடு நாள் விழா: 100 தமிழறிஞா்களுக்கு நாளை நிதியுதவி

post image

தமிழ்நாடு நாள் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கொண்டாடப்படுவதையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அகவை முதிா்ந்த 100 தமிழறிஞா்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

மேலும், சிறப்புக் கருத்தரங்கம், மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நம் மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என பெயா் சூட்டிய ஜூலை 18-ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான விழா சென்னை அடையாறில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கம், முத்தமிழ்ப் பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநா் ஜெ.ராஜமூா்த்தி தலைமையில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் ‘பேரறிஞா் அண்ணாவும் தமிழும்’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் த.இராமலிங்கம், ‘இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு’ என்ற தலைப்பில் சொற்பொழிவாளா் தேச மங்கையா்க்கரசி உள்ளிட்டோா் உரையாற்றவுள்ளனா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு மாநில அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்ற பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கவுள்ளாா். தொடா்ந்து அவா், அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் 100 பேருக்கு நிதியுதவி வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

விழாவில் தமிழ் வளா்ச்சித் துறைச் செயலா் வரவேற்புரையாற்றுகிறாா். செயலா் வே.ராஜாராமன் முன்னிலை வகித்துப் பேசுகிறாா்.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க