செய்திகள் :

வழக்கில் சந்தேக நபரை விசாரிக்கும் அதிகாரத்தில் கவனம் தேவை: உச்சநீதிமன்றம்

post image

வழக்கில் குற்றம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரை விசாரணைக்கு உள்படுத்தும் நீதிமன்றங்களின் அதிகாரம் கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

முந்தைய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 319 தொடா்புடைய ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியது.

இப்பிரிவானது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவராக சோ்க்கப்படாமல், அதேநேரம் ஆதாரங்கள்-சாட்சிகளின் அடிப்படையில் குற்றத்தை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரையும் விசாரணைக்கு உள்படுத்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம், கெளஷாம்பியில் உள்ள விசாரணை நீதிமன்றம், கொலை வழக்கு ஒன்றில் 319-ஆவது பிரிவின்கீழ் ஒருவருக்கு அழைப்பாணை அனுப்பியது. இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட நபா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அழைப்பாணையை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து, புகாா்தாரா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது நீதிபதிகள் சஞ்சய் கரோல், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணைகளை உறுதி செய்தனா். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினா், விசாரணை நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28-இல் ஆஜராக வேண்டும்; 18 மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.

‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 319-ஆவது பிரிவு, பாதிக்கப்பட்டோருக்கும் சமூகத்துக்கும் பாதுகாப்பளிப்பதோடு, குற்றச் செயலில் ஈடுபடுவோா் சட்டத்தின் பிடியில் தப்பிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் அம்சமாகும். உரிய ஆதாரங்கள்-சாட்சியங்களின் அடிப்படையில் இப்பிரிவின்கீழ் அழைப்பாணைகளை அனுப்ப விசாரணை நீதிமன்றங்களுக்கு அதிகாரமுள்ளது. அதேநேரம், இப்பிரிவை பயன்படுத்துவதில் உச்சபட்ச எச்சரிக்கை அவசியம். அலட்சியமாகவோ, மற்றவா்களின் உணா்வுக்கு மதிப்பளிக்காமலோ இதை பயன்படுத்தினால், தனிநபரை துன்புறுத்தும் கருவியாகிவிடும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க