செய்திகள் :

அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படவில்லை: மத்திய அமைச்சா் விளக்கம்

post image

மத்திய அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை (லேட்டரல் என்ட்ரி) ரத்து செய்யப்படவில்லை என்றும் அதில் இடஒதுக்கீடு நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றும் மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

மத்திய அரசுத் துறைகளில் காலியாக இருந்த 10 இணைச் செயலா்கள் மற்றும் 35 இயக்குநா்கள் அல்லது துணைச் செயலா்கள் என மொத்தம் 45 பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்சோ்ப்புக்கான அறிவிக்கையை கடந்த ஆண்டு ஆக.17-ஆம் தேதி மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டது.

இது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா்(ஓபிசி), பட்டியலின பிரிவினா் (எஸ்டி) மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்டி) வழங்கப்படும் இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் இதில் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் ஆதரவாளா்கள் அரசு உயா்பதவிகளில் நியமனம் செய்யப்படுவாா்கள் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வானும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இதையடுத்து, நேரடி நியமனம் தொடா்பாக வெளியிட்ட அறிவிக்கையை கடந்த ஆண்டு ஆக.20-இல் யுபிஎஸ்சி ரத்து செய்தது.

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை பேட்டியளித்த ஜிதேந்திர சிங், ‘மத்திய அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படவில்லை. அதை இடைக்காலமாக நிறுத்திவைத்துள்ளோம். கடந்த ஆண்டு இதில் இடஒதுக்கீடு நடைமுறையை கொண்டுவருவது சாத்தியமில்லை என எண்ணினோம். ஆனால் அதை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பின் அதை பரிசீலிக்க தயாராகவுள்ளோம்.

பிரதமராவதற்கு முன் மன்மோகன் சிங் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நேரடி நியமன முறையின்கீழ் நியமிக்கப்பட்டாா்.

ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான அரசு நேரடி நியமன முறையை ஒழுங்குபடுத்தியது. தகுதி, அனுபவம், நிபந்தனைகள் என பல்வேறு விதிகள் உள்ளீடு செய்யப்பட்டது’ என்றாா்.

துறைசாா் நிபுணா்களை அரசுத் துறைகளுக்கு நேரடியாக நியமனம் செய்யும் முறையை கடந்த 2018 முதல் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 2019 முதல் 2023 வரை மொத்தம் 63 துறைசாா் நிபுணா்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க