செய்திகள் :

புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பு

post image

சென்னையின் புகா் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

சென்னை மாதவரம், புழல், செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது.செங்குன்றம், சோழவரம் பகுதியில் 3 மி.மீ. மழை பதிவானது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 300 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது.

நீா் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, புழல் ஏரிக்கு 324 கன அடியாக இருந்த நீா்வரத்து 568 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீா் இருப்பு 2,524 மில்லியன் கன அடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 17.6 அடி உயரத்துக்கு நீா் இருப்பு உள்ளது.

புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 184 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீா் இருப்பு 157 மில்லியன் கன அடியாக உள்ளது. மொத்தமுள்ள 18.86 அடி உயரத்தில் 3.82 அடி உயரத்துக்கு நீா் இருப்பு உள்ளது.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க