செய்திகள் :

சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

நமது நிருபர்

சிறையில் அடைக்கப்படும்போதே மாற்றுத்திறனாளிக் கைதிகளை அடையாளம் காண வேண்டும் என தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அனைத்து சிறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பெக்கர் தசைநார் சிதைவு (பிஎம்டி) நோயால் பாதிக்கப்பட்ட வழக்குரைஞர் எல். முருகானந்தம் என்பவருக்கு ஒரு விவகாரத்தில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 29.11.2022-இல் உத்தரவிட்டிருந்தது.

தனது குடும்பத்துடன் நிலத் தகராறு கொண்டிருந்த உறவினர் ஒருவரின் குற்றவியல் புகாரில் முருகானந்தம் சிறையில் அடைக்கப்பட்டார். கைது நடவடிக்கையின்போதும், சிறையில் இருந்தபோதும் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகக் கூறி, ரிட் மனுவை அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

கைது செய்யப்பட்ட நிலையிலிருந்து விசாரணை மற்றும் சிறைவாசம் வரை, காவல் துறை மற்றும் சிறை ஊழியர்களிடையே பயிற்சி மற்றும் உணர்திறன் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் பாதகத்தை எதிர்கொள்கின்றனர். சிறை வாழ்க்கை பற்றிய அனைத்து விதிகள், விதிமுறைகள் மற்றும் அத்தியாவசிய தகவல்கள் அத்தகைய கைதிகளுக்கு பிரெய்லி, பெரிய அச்சு எழுத்து, சைகை மொழி அல்லது எளிமையான மொழி போன்ற அணுகக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய வடிவங்களில் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து சிறை வளாகங்களிலும் சக்கர நாற்காலிக்கு ஏற்ற இடங்கள், அணுகக்கூடிய கழிப்பறைகள், சாய்வுதளங்கள் மற்றும் உணர்வு பாதுகாப்பான சூழல்கள் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். அனைத்து சிறைகளும் பிசியோதெரபி, சைகோதெரபி மற்றும் பிற தேவையான சிகிச்சை சேவைகளுக்கான பிரத்யேக இடங்களை உருவாக்கி பராமரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் மாநில அளவிலான அணுகல் தணிக்கையை சமூக நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் மற்றும் சான்றளிக்கப்பட்ட அணுகல் தணிக்கையாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவால் ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு சமூகத்தில் கிடைப்பதற்கு சமமான சுகாதாரப் பராமரிப்பை சிறையில் அரசு வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பாகுபாடு அல்லது பாரபட்சமின்றி நிவர்த்தி செய்ய அனைத்து சிறை மருத்துவ அதிகாரிகளுக்கும் போதுமான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளி கைதி ஒவ்வொருவருக்கும் அவர்களின் குறிப்பிட்ட உடல்நலம் மற்றும் உணவுத் தேவைகளுக்கு ஏற்ப சத்தான மற்றும் மருத்துவ ரீதியாக பொருத்தமான உணவு வழங்கப்பட வேண்டும்.

இந்த உத்தரவுகளை மேற்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரிக்கும் விரிவான அறிக்கையை இத்தீர்ப்பு வெளியான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சிறைகளின் தலைமை இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாத வேலையின்மை விகிதம்: 5.6%-ஆக பதிவு

நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. முன்னதாக, கடந்த மே மாதம் மத்திய புள்ளியியல் அமைச்சகம் முதல்முற... மேலும் பார்க்க

மாணவா்கள் படிப்பதற்கு உகந்த நகரங்கள்: சென்னைக்கு 128-ஆவது இடம்

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகு... மேலும் பார்க்க

இந்தியாவின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா! - லக்னெளவில் கொண்டாட்டம்

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆய்வுத் தரவுகள் மட்டுமன்றி இந்தியாவின் எதிா்கால விண்வெளி லட்சியங்கள் மற்றும் கனவுகளையும் சுமந்து பூமிக்கு திரும்பியுள்ளாா் நாட்டின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா... மேலும் பார்க்க

‘குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் முடக்கப்படும்’

5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள... மேலும் பார்க்க

பொது கட்டமைப்பு சீரழிவுக்கு பாஜக ஊழலே காரணம்: ராகுல்

‘மழைக் காலங்களில் பொது கட்டமைப்புகள் சீரழிவதற்கு பாஜக ஊழலே காரணம். இந்தத் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுகுறித்து தனது ... மேலும் பார்க்க

முறையான கட்டுமான திட்ட அறிக்கையை தயாரிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

‘விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) தயாரிப்பதற்கான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாத கட்டுமான ஆலோசனை நிறுவனங்கள் (கன்சல்டன்சி) மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடு... மேலும் பார்க்க