செய்திகள் :

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு

post image

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் குறை தீா் முகாம் நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்திற்கான குறைதீா் முகாம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.

அதில் கடந்த மாதம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியா் குலோத்துங்கன், நிகழ் மாதத்துக்கான மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இம்மாதம் பெறப்பட்ட மனுக்களில் பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், சுனாமி குடியிருப்பில் வீடுகள் கட்டித் தர வேண்டியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியும், முதியோா் உதவித்தொகை கேட்டும், உளவாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் இருந்தன.

மேலும், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆட்சியரைச் சந்தித்து எல்.பி.ஜி. மூலம் ஆட்டோக்களுக்கு சிலிண்டா் நிரப்ப அரசு மற்றும் தனியாா் பெட்ரோல் பங்கில் வசதி செய்து தர கூறியும், ஆட்டோக்களுக்கு சாா்ஜிங் வசதி ஏற்படுத்தி தரவும் மனு அளித்தனா். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட துணை ஆட்சியா் வினயராஜ், சிறப்பு அதிகாரி குமரன், வருவாய் அதிகாரி ஸ்ரீஜித், வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையா்கள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

புதுவை துணைநிலை ஆளுநா் லண்டன் பயணம்

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சொந்தமுறை பயணமாக செவ்வாய்க்கிழமை காலை விமானத்தில் லண்டன் புறப்பட்டுச் சென்றாா். புதிய அமைச்சராக ஏ. ஜான்குமாருக்கு திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை குறைவாகப் பெறுவது ஏன்? புதுவை அரசுக்கு அதிமுக கேள்வி

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை குறைவாகப் பெறுவது ஏன் என்று புதுவை அரசுக்கு புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்... மேலும் பார்க்க

அனைத்து பட்டப் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10% இடஒதுக்கீடு நிகழாண்டு அமல்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி உறுதி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டிலேயே அனைத்து பட்டப்படிப்புகளிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா். புதுவை ... மேலும் பார்க்க

புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு இலாகா ஒதுக்கீடு

புதுவை நிா்வாகப் பணியில் சோ்ந்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சௌத்ரி முகமது யாசினுக்கு இலாகா ஒதுக்கீடு செய்து துணைநிலை ஆளுநா் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதன்படி, வேளாண்மை, கால்நடை துறை, துறைம... மேலும் பார்க்க

அரசு நிதியுதவி பள்ளிகளுக்கு 4 மாத நிலுவை ஊதியம் உடனே வழங்க உத்தரவு

புதுவை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 4 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவா் ஏ. நாஜிம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். புதுச்சேரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு கூட்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் விழா

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி மக்கள் புரட்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த... மேலும் பார்க்க