செய்திகள் :

கோவை: பள்ளி மாணவனை தாக்கி, பாலியல் தொல்லை - இளைஞர் கைது!

post image

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் 13 வயது மாணவர் வசித்து வருகிறார். அவர் அன்னூர் அருகே அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுதியிலிருந்து வெளியே வந்த மாணவர் அவ்வழியே பைக்கில் வந்த நபர் ஒருவரிடம் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.

கோவை

பைக்கில் வந்த நபர் மாணவனை அருகில் ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அந்த நபர் மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த மாணவன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர் மரக்கட்டையால் மாணவனின் தலையில் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த மாணவர் மயங்கியுள்ளார். 

சூலூர் காவல்நிலையம்

ரத்த வெள்ளத்தில் இருந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காவல்துறை விசாரணையில் அந்த இளைஞர் திருப்பூர் மாவட்டம் கோடாங்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (வயது 23) என்பது தெரியவந்தது. காவல்துறை விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வசந்தகுமார் அந்த மாணவனை மதுபானக்கடைக்கு அழைத்து சென்று மது அருந்த வைத்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்

பிறகு அவரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று தான்பாலின உறவில் ஈடுபட முயற்சித்துள்ளார். சூலூர் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏமன் கொலை வழக்கு; Blood Money-க்கு உடன்பாடு? - கேரள நர்சின் மரண தண்டனை நிறுத்தம்! - பின்னணி என்ன?

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா (34). நர்ஸிங் படித்துமுடித்த கையோடு 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். 2011-ம் ஆண்டு தொடுபுழாவைச்... மேலும் பார்க்க

`டேங்கை மாற்றினால் போதுமா; குற்றவாளிகள்?’ - அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்; குமுறும் மக்கள்

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற இளைஞர் சேலத்தில் படுகொலை.. காவல் நிலையம் அருகே கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலைய... மேலும் பார்க்க

60 வயது முதியவருக்கு திருமண ஆசை காட்டி மோசடி; ரூ.15 லட்சத்தை சுருட்டிய பூசாரி-நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்ப... மேலும் பார்க்க

நிறப்பாகுபாட்டை உடைத்து உலக அழகிப் பட்டம் - ஆப்ரிக்கா வரை சென்ற புதுச்சேரி பெண்ணின் தற்கொலை பின்னணி

மாடலிங் மீதான காதலால் மருத்துவப் படிப்பை துறந்த சங்கரப்பிரியாபுதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சங்கரப்பிரியா. சிறு வயது முதல் படிப்பில் சுட்டியாக இருந்த சங்கரப் பிரியா, பல சூழல... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் பாய் பிரண்டாக பழகி, மாணவியிடம் 60 சவரன் நகையை மோசடி செய்த தோழி..

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் ஒரு ஸ்கூலில் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கல்லூரி படிப்புக்கு தயாராகி வருகிறார். அவரது தந்தை குளச்சல் பகுதியில் ஜெரா... மேலும் பார்க்க