செய்திகள் :

"ஹாலிவுட் போல சண்டைக் காட்சிகள்; மோகன் ராஜ் போல இனி யாரும் பலியாகக் கூடாது" - தயாரிப்பாளர்கள் சங்கம்

post image

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டுவம்'. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பில் மோகன் ராஜ் (வயது 52) என்ற சீனியர் ஸ்டண்ட் கலைஞர் சண்டைக் காட்சியின் போது உயிரிழந்திருக்கிறார்.

சீனியர் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ்

விபத்தின் சண்டைக் காட்சியைப் படமாக்கும்போது மோகன் ராஜ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அவருடன் பணியாற்றியவர்கள் தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், "திரு. மோகன் ராஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். அவரின் குடும்பத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இரங்கலை தெரிவிக்கும் இந்த நேரத்தில்,

இது போன்ற விபத்துகள் இனி தமிழ் திரைப்பட தயாரிப்புகளில் நடக்காமல் இருக்க, தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்-களும், சண்டை கலைஞர்களும் மேலும் சிறப்பான முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

பார்வையாளர்களை கவர நம் திரைப்படங்களில் உலக தரத்திற்கு ஹாலிவுட் போல சண்டைக்காட்சிகள் இடம்பெற முயற்சிப்பது அவசியம். அதே சமயம், ஹாலிவுட் படப்பிடிப்புகளில் செய்யப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் நம் படப்பிடிப்புகளில் செய்த பின் தான், சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற வேண்டும். இன்னொமொரு கலைஞனின் உயிர் பலியாகாமல் தடுக்க, நாம் அனைவரும் இனிமேல் இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

"எம்.ஜி.ஆர் பற்றி சரோஜா அம்மா சொன்னது; 'ஆதவன்' படத்தில் நடந்ததை மறக்க முடியாது"- கே.எஸ்.ரவிக்குமார்

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 14) காலமானார். சினிமா மட்டுமன்றி தன் வாழ்வில் பொதுசேவையும் செய்து வந்த அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டிர... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: 'செளபின் சாஹிர் கதாபாத்திரத்தில் பகத் நடிக்க வேண்டியது, ஆனால்...' - லோகேஷ் கனகராஜ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்க... மேலும் பார்க்க

சிலம்பரசன்: 10 நாளில் 10 கிலோ எடை குறைப்பா? வெற்றிமாறன் கூட்டணி அமைந்தது எப்படி? - STR 49 அப்டேட்ஸ்

கடந்த சில நாட்களாக ஸ்லிம் சிலம்பரசன் பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்.டி.ஆர்.-49' படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார். அதுவும் எப்படி? 10 நாட்களில... மேலும் பார்க்க

'நானும், அனிருத்தும் மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள், அதனால தான்..'- மோனிகா பாடல் குறித்து லோகேஷ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்க... மேலும் பார்க்க

Lokesh: ``அமீர் கானுடனானப் படம் உலகத்தரமான திரைப்படமாக இருக்கும்'' - அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: " `லியோ' படத்திற்கு பிறகு என்னுடைய சம்பளம்..' - லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்

'லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்... மேலும் பார்க்க