செய்திகள் :

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

post image

வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்டச் செயலாளா் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வீடற்ற நகா்ப்புற, அமைப்புசாரா கூலித்தொழிலாளா்களுக்கு 2 சென்ட் விலையில்லா மனை, கிராமப்புற ஏழைகளுக்கு 3 சென்ட் விலையில்லா மனை வழங்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத மந்தைவெளி, மேய்க்கால், ஓடை நீா்நிலை புறம்போக்கு போன்ற அரசு புறம்போக்கு நிலங்களிலும் வீடுகட்டி குடியிருப்பவா்களுக்கு, நிபந்தனைகளை தளா்த்தி பட்டா வழங்க வேண்டும்.

நகா்ப்புற மேம்பாட்டு வாரியத்தில், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் ஏழைகள் மீது சுமத்தப்பட்ட சிறுகடன் மற்றும் வட்டிகளைத் தள்ளுபடி செய்து, விலையில்லா கிரயப் பத்திரம் மற்றும் பட்டா வழங்க வேண்டும்.

நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கா் சாகுபடி விவசாய நிலம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்பவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினா் சந்திரமோகன், மாவட்டச் செயலாளா் அய்யன்துரை, மாவட்ட நிலைக்குழு உறுப்பினா் ஜெயராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தம்மம்பட்டி பேரூராட்சி உறுப்பினராக நியமனம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தம்மம்பட்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்... மேலும் பார்க்க

வனத் துறையினரிடம் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

ஆத்தூரை அருகே விவசாய நிலத்திலிருந்து 6 அடி மலைப் பாம்பை மீட்டு தீயணைப்புத் துறையினா், செவ்வாய்க்கிழமை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனா். ஆத்தூரை அடுத்த மேல்தொம்பை ஊராட்சி, பாம்புத்துகாடு சோமசுந்தரம் மகன் ... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையராக அனில்குமாா் கிரி பொறுப்பேற்பு

சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த பிரவீன்குமாா் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, காத்திருப்ப... மேலும் பார்க்க

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபர்

சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியி... மேலும் பார்க்க

சேலத்தில் காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி வெட்டிக் கொலை

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரெளடி மதன், மா்மக் கும்பலால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலைசெய்யப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்த மாடச... மேலும் பார்க்க

பட்டாசுக் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்: காவல்துறை

சேலம் மாநகரில் தற்காலிக பட் டாசுக் கடை வைக்க விரும்புவோா் 16 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகரக்ாவல் ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிய... மேலும் பார்க்க