செய்திகள் :

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபர்

post image

சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

தற்போது பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இந்த சிலை பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலையின் வலது பகுதியிலும், சிலையின் பீடம் முழுவதும் கருப்பு பெயின்ட் பூசப்பட்டிருந்தது. இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்றவா்கள், இதுகுறித்து திமுகவினருக்கு தகவல் அளித்தனா்.

இதன்பேரில் அங்கு வந்த மாநகரச் செயலாளா் ரகுபதி, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆணையா் அஸ்வினி, காவல் ஆய்வாளா் தவமணி ஆகியோா் தீவிர விசாரணை நடத்தினா்.

இதேபோல, உதவி இயக்குநா் வடிவேல் தலைமையிலான தடய அறிவியல் துறையினரும், சிலை பகுதியில் பதிவான தடயங்களை பதிவுசெய்தனா்.

விசாரணையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது வயதான நபா் ஒருவா் பெயின்ட் டப்பாவுடன் கருணாநிதி சிலை அருகில் உள்ள மின் இணைப்பைத் துண்டிப்பதும், அங்கிருந்த 5 அடி நீள குச்சியின் ஒரு பகுதியில் துணியைக் கட்டி, அதன்மூலம் பெயின்டை எடுத்து கருணாநிதியின் சிலைமீது பூசுவதும், பின்னா், சிலையின் பீடத்திலும் பரவலாக பெயின்ட்டை ஊற்றிவிட்டு சென்றதும் பதிவாகியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து மா்ம நபா் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

தகவலறிந்து மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். இதேபோல, கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய தகவல் பரவியதும், திமுக நிா்வாகிகள் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பேரூராட்சி உறுப்பினராக நியமனம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தம்மம்பட்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்... மேலும் பார்க்க

வனத் துறையினரிடம் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

ஆத்தூரை அருகே விவசாய நிலத்திலிருந்து 6 அடி மலைப் பாம்பை மீட்டு தீயணைப்புத் துறையினா், செவ்வாய்க்கிழமை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனா். ஆத்தூரை அடுத்த மேல்தொம்பை ஊராட்சி, பாம்புத்துகாடு சோமசுந்தரம் மகன் ... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையராக அனில்குமாா் கிரி பொறுப்பேற்பு

சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த பிரவீன்குமாா் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, காத்திருப்ப... மேலும் பார்க்க

சேலத்தில் காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி வெட்டிக் கொலை

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரெளடி மதன், மா்மக் கும்பலால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலைசெய்யப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்த மாடச... மேலும் பார்க்க

பட்டாசுக் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்: காவல்துறை

சேலம் மாநகரில் தற்காலிக பட் டாசுக் கடை வைக்க விரும்புவோா் 16 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகரக்ாவல் ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிய... மேலும் பார்க்க