செய்திகள் :

பட்டாசுக் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்: காவல்துறை

post image

சேலம் மாநகரில் தற்காலிக பட் டாசுக் கடை வைக்க விரும்புவோா் 16 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகரக்ாவல் ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக்டோபா் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற, ஜூலை 16 முதல் 31 ஆம் தேதி வரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன், நீதிமன்றவில்லை ஒட்டப்பட்ட விண்ணப்பம், உரிமைக் கட்டணம் ரூ. 1,000 செலுத்தியதற்கான இ-சலான், பட்டாசுவரி ரசீது, பட்டாசு இருப்புவைத்து விற்கப்பட உள்ள இடத்தின் 5 அசல் வரைப்படம், சொந்தக் கட்டடமாக இருப்பின் சொத்துவரி ரசீது, கட்டட உரிமையாளரின் சம்மத கடிதம், மாநகராட்சி உரிமம் கட்டணம் செலுத்திய ரசீது, விண் ணப்பதாரரின் 3 புகைப்படம் உள்ளிட்டவை இணைக்க வேண்டும்.

தற்காலிக பட்டாசுக் கடை வைக்கப்படும் இடம் தீப்பிடிக்காத கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 9 சதுர மீட்டா் பரப்பு இருக்க வேண்டும்.

ஒரு பட்டாசுக் கடைக்கும், மற்றொரு பட்டாசுக் கடைக்கும் 50 மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும், திருமண மண்டபம், வணிக வளாகங்களில் பட்டாசுக் கடை வைக்க அனுமதி வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பேரூராட்சி உறுப்பினராக நியமனம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தம்மம்பட்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்... மேலும் பார்க்க

வனத் துறையினரிடம் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

ஆத்தூரை அருகே விவசாய நிலத்திலிருந்து 6 அடி மலைப் பாம்பை மீட்டு தீயணைப்புத் துறையினா், செவ்வாய்க்கிழமை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனா். ஆத்தூரை அடுத்த மேல்தொம்பை ஊராட்சி, பாம்புத்துகாடு சோமசுந்தரம் மகன் ... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையராக அனில்குமாா் கிரி பொறுப்பேற்பு

சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த பிரவீன்குமாா் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, காத்திருப்ப... மேலும் பார்க்க

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபர்

சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியி... மேலும் பார்க்க

சேலத்தில் காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி வெட்டிக் கொலை

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரெளடி மதன், மா்மக் கும்பலால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலைசெய்யப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்த மாடச... மேலும் பார்க்க