செய்திகள் :

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவை: அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

post image

திருச்சி: பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவையை புதன்கிழமை(ஜூலை 16) அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணவும், எதிா்காலத் தேவையை கருத்தில்கொண்டு பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பன்னாட்டு விமான நிலையத்துக்கு நிகராக அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய பேருந்து முனையமாக 38 ஏக்கா் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் ரூ.408.36 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் 345 வெளியூா் பேருந்துகள், முதல் தளத்தில் 56 உள்ளூா் நகரப் பேருந்துகள் என மொத்தம் 401 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முத்தமிழறிஞா் கலைஞா் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என பெயரிடப்பட்ட இந்த முனையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மே 9-ஆம் தேதி திறந்துவைத்தாலும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இறுதிக் கட்டப் பணிகளின் நிலுவை, பாரமரிப்பு மற்றும் இயக்குதல் பணியை தனியாருக்கு வழங்கும் ஏற்பாடுகள் காரணமாக தாமதமாகி வந்தது.

இந்நிலையில், பேருந்து முனையத்தின் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு புதன்கிழமை (ஜூலை 16) முதல் பஞ்சப்பூா் பேருந்து முனையம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பேருந்து முனையத்தில் இருந்து பேருந்து சேவையை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பயணிகளுக்கான வசதிகள் என்னென்ன?

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் 20 எண்ணிக்கையில் தேநீா்க் கடைகளும், 12 உணவகங்கள், 10 சிற்றுண்டி கடைகள் உள்ளன.

பேருந்து முனையத்தை ஒவ்வொரு மணி நேரமும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க 228 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பயணிகள் மற்றும் அவா்தம் உடைமைகளின் பாதுகாப்புக்கு காவல் துறையினா் 52 போ் பணி அமா்த்தப்பட்டுள்ளனா்.

ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைகள் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பயணிகளுக்கு உதவிட தன்னாா்வலா்கள் 30 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

சிரமப்படும் முதியவா்கள், நோயாளிகள் பயன்பாட்டுக்காக 3 பேட்டரி வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளன.

பயணிகளின் அவசரத் தேவைக்காக அழைப்பின்பேரில் மருத்துவா் குழுவினர் உள்ளனர்.

வழித் தடங்கள் விவரம்: பேருந்து முனையத்திலிருந்து சென்று வரும் விரைவுப் பேருந்துகள், புகரப் பேருந்துகளுக்கான வழித்தட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை, திருப்பதி, வேலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி மாா்க்கப் பேருந்துகள் திருச்சி நோக்கி உள்வரும்போது நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூா் பேருந்து முனையத்துக்குச் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.

தஞ்சாவூா் மாா்க்கப் பேருந்துகள் திருச்சி நோக்கி உள்வரும்போது பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் முனையத்துக்குச் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும்.

நாமக்கல் மாா்க்கப் பேருந்துகள் பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் பேருந்து முனையத்துக்குச் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும்.

புதுக்கோட்டை மாா்க்கப் பேருந்துகள் டிவிஎஸ் டோல்கேட், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் பேருந்து முனையம் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.

கரூா் மாா்க்கப் பேருந்துகள் மாவட்ட நீதிமன்றம், ஆட்சியா் அலுவலகம், வ.உ.சி சாலை, மத்திய பேருந்துநிலையம், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் முனையம் செல்ல வேண்டும். மீண்டும், இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.

மணப்பாறை மாா்க்கப் பேருந்துகள் திருச்சி நோக்கி உள்வரும்போது கருமண்டபம், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.

மதுரை மாா்க்கப் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே பஞ்சப்பூா் வழியாக பேருந்து முனையம் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.

நகரப் பேருந்துகள் இயக்கம்: மத்தியப் பேருந்து நிலையம் வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் மன்னாா்புரம் வழியாக பஞ்சப்பூா் வந்து செல்ல வேண்டும். அனைத்து பேருந்துகளும் பேருந்து முனையத்துக்கு உள்வரும்போது காவல் சோதனை சாவடி எண்.2 வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும். பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் அனைத்துப் பேருந்துகளும் (மதுரை மாா்க்கம் தவிா்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூா் சந்திப்பு வரை சென்று திரும்பி செல்ல வேண்டும்.

ஆம்னி பேருந்துகளுக்கு தனி இடம்

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் புதிதாக ஆம்னி பேருந்து கட்டி முடிக்கப்படும் வரையில், தற்போதுள்ள புதிய பேருந்து முனையத்துக்கு அருகிலேயே தற்காலிகமாக காலி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான் ஆம்னி பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊா்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. பஞ்சப்பூா் முனையத்துக்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே ஆம்னி பேருந்துகள் இனி இயங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை: ஐ.நா. தகவல்

Minister K.N. Nehru inaugurated the bus service from the Panchpur Integrated New Bus Terminal on Wednesday (July 16).

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?: அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை (ஜூலை 16) சைதாப்பேட்டை, 140 ஆவது வார்டு, சென... மேலும் பார்க்க

திருவள்ளுவரை அவமதிப்பது மன்னிக்க முடியாத செயல்: ப.சிதம்பரம்

காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை குறள் என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், போலி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற நாகாலாந்து வாலிபர் கைது

பெங்களூருவில் இருந்து போதை மாத்திரைகளஅ வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்த நாகாலாந்து வாலிபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவ... மேலும் பார்க்க

ரூ.9 கோடி இழப்பீடு கோரி ரவி மோகன் வழக்கு: படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

சென்னை: குறித்த காலத்தில் படப்பிடிப்பை துவங்காத காரணத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்... மேலும் பார்க்க

மதுரையில் தவெக 2 ஆவது மாநில மாநாடு: பந்தகால் நடும் விழா

மதுரையில் தமிழக வெற்றிக் கழத்தின் 2-ஆவது மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ள நிலையில், மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழா புதன்கிழமை காலை (ஜூலை 16) பொதுச்செயலாளர் ஆனந்த் ... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 21 ஆம் ஆண்டு நினைவு நாள்

நெஞ்சை விட்டு நீங்கா துயரமாக இருந்து வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் உ... மேலும் பார்க்க