செய்திகள் :

2030க்குள் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கத் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!

post image

பிகாரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்குப் பிகார் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வேலைவாய்ப்பு தொர்பான தொழிலாளர் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. மேலும் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த முடிவுகளை எடுக்க மேம்பாட்டு ஆணையர் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் முடிவு செய்தது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2025 - 2030) ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இலக்கை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஞாயிறன்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார்.

இதை அடைய, தனியார்த் துறையிலும், குறிப்பாக தொழில்துறையிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக உயர்நிலைக் குழு அமைக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். சித்தார்த்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2025-2030) மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கான தொழிலாளர் துறை முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதேபோன்று பல்வேறு துறைகளிலிருந்து 30 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

இதுவரை மாநிலத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைகளும், தோராயமாக 39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. மேலும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை வழங்கும் இலக்கு நிச்சயம் அடையும் என்று அவர் கூறினார்.

The Bihar Cabinet on Tuesday cleared a proposal to create 'one crore jobs and employment opportunities' in the next five years.

நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்த உதவிய ஏ.பி. அபுபக்கர் யார்?

கேரள செவிலியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைப்பதாக யேமன் அரசு இன்று (ஜூலை 15) அறிவித்துள்ளது. நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க சன்னி மு... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு ஜாமீன்: அவதூறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

லக்னௌ: ராணுவ வீரர்களைப் புண்படுத்தும் விதத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் மக்களவை எதிர்ர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்... மேலும் பார்க்க

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: செப்டம்பரில் அடுத்தகட்ட பேச்சு

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்(எஃப்.டி.ஏ.) மேற்கொள்வது குறித்த அடுத்தகட்ட பேச்சு செப்டம்பரில் நடைபெற உள்ளது. கடந்த 2013-இல் இந்த பேச்சு முடங்கியது. இந்தநிலைய... மேலும் பார்க்க

“ஒட்டுமொத்த தேசத்துக்கும் சொந்தமாகிவிட்டார்” - சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் ஆனந்த கண்ணீர்!

இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சாதனையை நிகழ்த்திய சுக்லா உள்பட 4 வீரா்களும் இந்திய நேரப்ப... மேலும் பார்க்க

போதைக்கு அடிமையான மருமகனை திருத்த 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த மாமனார்!

லக்னௌ: போதைக்கு அடிமையான மருமகனை அவரது மாமனார் 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் பீலிபீட் மாவட்டத்தைச் சேர்ர்ந்தவர் முகமது யாமீன், இவர் போதை ப... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவு கொள்கையை அழிக்கும் சர்க்கஸ்! ஜெய்சங்கரை விமர்சித்த ராகுல்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுற... மேலும் பார்க்க