செய்திகள் :

உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

post image

உலகின் வயதான மாரத்தான் வீரரும், பஞ்சாபை சேர்ந்தவருமான ஃபௌஜா சிங் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற 114 வயதான ஃபௌஜா சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பீயாஸ் பிந்த் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தார்.

பலத்த காயமடைந்த ஃபௌஜா சிங்கை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் ஃபௌஜா சிங், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மீது மோதிய வாகனம் எது அவரது, உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1911 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்தவரான ஃபௌஜா சிங், 1993 ஆம் ஆண்டு தனது 89 வது வயதில் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். ‘டர்பனேட் டோர்னாடோ’ எனப் புகழப்படும் ஃபௌஜா சிங், மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றார். மேலும், தனது 100-வது வயதில் டொராண்டோ வாட்டர்ஃபிரண்ட் மராத்தானில் பங்கேற்று உலகப் புகழ்பெற்றார்.

2000 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான 14 ஆண்டுகளில் 9 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றார். லண்டன் மராத்தானில் போட்டியிட்டு, பந்தய தூரத்தை 6 மணி நேரம் 54 நிமிடங்களில் முடித்து சாதனையும் படைத்திருந்தார்.

இன சகிப்புத்தன்மையின் அடையாளமாக இருந்ததற்காக, 2003 ஆம் ஆண்டு தேசிய இனக் கூட்டணியால் ஃபௌஜா சிங்குக்கு ‘எல்லிஸ் தீவு பதக்கம்’ வழங்கப்பட்டது.

அப்போது அவர் இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் அமெரிக்கரல்லாதவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். மேலும், 2011 ஆம் ஆண்டில் ஃபௌஜா சிங்கிற்கு ‘இந்தியாவின் பெருமை' என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

ஃபௌஜா சிங்கின் மறைவுக்கு பஞ்சாபைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Turbaned Tornado No More: World’s Oldest Marathon Runner Fauja Singh Dies In Road Accident At 114

இதையும் படிக்க:தேர்வர்கள் கவனிக்க..! குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு!

கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை ஊக்குவித்த சுபான்ஷு சுக்லா: மோடி

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் ஆஜராக லக்னௌ வந்தடைந்தார் ராகுல்!

அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி லக்னௌ வந்தடைந்தார்.பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய வீரர்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்பட... மேலும் பார்க்க

பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரா்களும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பினர்.அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவ... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத்தொடர்: குடியரசுத் துணைத் தலைவருடன் கார்கே ஆலோசனை!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.நா... மேலும் பார்க்க

அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார் ஆந்திர முதல்வர்!

ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தனது இரண்டு நாள் தில்லி பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல்வேறு மத்திய அமைச்சர்களைச் சந்திக்க உள்ளார்.இரண்டு நாள் பயணமாக தில்லி வந்துள்ளது... மேலும் பார்க்க

தில்லியில் நான்கு என்ஜின் அரசு முற்றிலும் தோல்வி: கேஜரிவால்

தில்லியில் நான்கு என்ஜின் அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் பாஜகவைத் தாக்கி பேசியுள்ளார். தலைநகரில் துவாரகா பகுதியில், தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்... மேலும் பார்க்க