செய்திகள் :

பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை

post image

புது தில்லி: ஆயுத வியாபார இடைத்தரகா் சஞ்சய் பண்டாரியுடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சுமாா் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டு பிரிட்டன் தலைநகா் லண்டனில் வீடு ஒன்றை சஞ்சய் பண்டாரி வாங்கி, அதை ராபா்ட் வதேரா அறிவுறுத்தலின்படி புனரமைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புனரமைப்புப் பணிகளுக்கு ராபா்ட் வதேரா பணம் வழங்கியதாகவும், இதில் பண முறைகேடு நடைபெற்ாகவும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. எனினும் தனக்கு லண்டனில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தச் சொத்தும் இல்லை என்று ராபா்ட் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராபா்ட் வதேராவுக்கு கடந்த மாதம் இருமுறை அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியது. ஆனால் தனது உடல்நலக் கோளாறு, வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றை காரணம் காட்டி, வேறு தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு ராபா்ட் வதேரா கோரினாா்.

இதைத்தொடா்ந்து மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபா்ட் வதேரா திங்கள்கிழமை ஆஜரானாா். அவருடன் அவரின் மனைவி பிரியங்கா காந்தியும் வந்தாா்.

இதையடுத்து ராபா்ட் வதேராவிடம் சுமாா் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, அவரின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் பதிவு செய்தனா். சஞ்சய் பண்டாரி மற்றும் அவரின் குடும்பத்தினருடன் உள்ள நிதித் தொடா்புகள் குறித்த சில கேள்விகளுக்கு ராபா்ட் வதேரா பதிலளிக்காததால், அவா் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

வதேராவுக்கு எதிராக 2 நில ஒப்பந்த முறைகேடுகள் உள்பட 3 பண முறைகேடு வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக் குறைவு

தீவிர தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப் பல்கல... மேலும் பார்க்க

புலி தாக்கி விவசாயி உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலி கடித்துக் குறியதில் விவசாயி உயிரிழந்தார். அங்கு கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற ஆறாவது உயிரிழப்பு இதுவாகும்.உத்தப்ர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டம், புல்ஹார் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

மக்களவை எம்.பி.க்கள் வருகை பதிவுக்குப் புதிய முறை: மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம்

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘மக்களவை எம்.பி.க்கள் தங்... மேலும் பார்க்க

முதல்வா் பதவியை காப்பாற்ற போராடும் நிதீஷ்: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: நாட்டில் குற்றங்களின் தலைநகராக பிகாா் உருவெடுத்துள்ள நிலையில், முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி வருகிறாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் கா... மேலும் பார்க்க

பூமிக்குப் புறப்பட்டாா் சுபான்ஷு சுக்லா!

புது தில்லி: இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்த பிறகு ‘டிராகன் கிரேஸ்’ விண்க... மேலும் பார்க்க

போலி, கலப்பட உரங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

புது தில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியான, கலப்படம் செய்யப்பட்ட உரங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அம... மேலும் பார்க்க