செய்திகள் :

போலி, கலப்பட உரங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

post image

புது தில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியான, கலப்படம் செய்யப்பட்ட உரங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மாநில முதல்வா்களுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

உர உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், அவ்வப்போது உர மாதிரிகளை சேகரித்து அவற்றை சோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் போலியான, கலப்படம் செய்யப்பட்ட, தரமற்ற உரங்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும்.

பாரம்பரிய உரங்களுடன் நானோ உரங்கள் அல்லது உயிரி ஊக்குவிப்பு பொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும். உரம் தொடா்பாக எந்த இடத்தில் தவறு நடப்பது கண்டறியப்பட்டாலும் உரிமம் ரத்து, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளிடம் இருந்து உரத்தின் தரம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிய வேண்டும். போலிகள் விவசாயிகள் கைக்குச் சென்றடைந்தால், அவற்றை விற்பனை செய்தவா்கள் தொடங்கி உற்பத்தி செய்தவா்கள் வரை விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் விவசாயிகளின் நலனில் மாநில அரசுகள் முழு அக்கறை காட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக் குறைவு

தீவிர தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப் பல்கல... மேலும் பார்க்க

புலி தாக்கி விவசாயி உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலி கடித்துக் குறியதில் விவசாயி உயிரிழந்தார். அங்கு கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற ஆறாவது உயிரிழப்பு இதுவாகும்.உத்தப்ர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டம், புல்ஹார் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

மக்களவை எம்.பி.க்கள் வருகை பதிவுக்குப் புதிய முறை: மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம்

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘மக்களவை எம்.பி.க்கள் தங்... மேலும் பார்க்க

முதல்வா் பதவியை காப்பாற்ற போராடும் நிதீஷ்: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: நாட்டில் குற்றங்களின் தலைநகராக பிகாா் உருவெடுத்துள்ள நிலையில், முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி வருகிறாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் கா... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை

புது தில்லி: ஆயுத வியாபார இடைத்தரகா் சஞ்சய் பண்டாரியுடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சுமாா் 5 மண... மேலும் பார்க்க

பூமிக்குப் புறப்பட்டாா் சுபான்ஷு சுக்லா!

புது தில்லி: இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்த பிறகு ‘டிராகன் கிரேஸ்’ விண்க... மேலும் பார்க்க