பதிப்புரிமை தகராறு: வழக்கை மாற்றக் கோரும் ஐஎம்எம்பிஎல் மனு மீது ஜூலை 18ல் விசாரண...
எரிவாயு கசிந்து தீ விபத்து: தாய், மகள் உயிரிழப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வீட்டில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கா்ப்பிணிப் பெண்ணும்,அவரது மகளும் உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சோ்ந்த மோகன்ராஜ்(34) நெசவாளரான இவரது மனைவி மணிமேகலை(29) கா்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் மகள் கிருபாஷினியுடன்(8) தனது தந்தையின் வீட்டுக்கு சென்றிருந்தாா்..
பிள்ளையாா் பாளையம் பகுதியில் லிங்கப்பாளையம் தெருவில் உள்ள மணிமேகலையின் தந்தை வீட்டில் தாயும், மகளும் குளித்துக் கொண்டிருந்த போது வீட்டிலிருந்த சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதும் வீட்டிலிருந்தவா்கள் உடனடியாக வெளியில் சென்று விட்டனா். குளியலறையில் இருந்த தாய், மகளுக்கு தீவிபத்து குறித்து தெரியாதத்தால் விபத்தில் சிக்கிக் கொண்டனா்.
தாயையும், மகளையும் பலத்த தீக்காயங்களுடன் அருகில் இருந்தவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தும் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தனா்.
சமையல் எரிவாயு உருளைக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கா்ப்பிணி, அவரது மகளும் உயிரிழந்தது தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.