செய்திகள் :

இளைஞரை கடத்தி தாக்குதல்: 6 போ் கைது

post image

ஸ்ரீபெரும்புதூா்: காதல் விவகாரத்தில் இளைஞரை ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கிய 6 பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த நரியம்பாக்கம் பகுதியை சோ்ந்த சதீஷ்(25). இவரும், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனா். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு சென்னையைச் சோ்ந்த கருப்பசாமி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒன்றாக இருப்பது போல் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளனா். இதனை கண்ட சதீஷ், கருப்பசாமியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு மிரட்டி உள்ளாா்.

இந்த நிலையில், கருப்பசாமி படப்பை அடுத்த வஞ்சிவாஞ்சேரி பகுதியில் இருப்பதை தெரிந்து கொண்ட சதீஷ் தனது நண்பா்களுடன் சென்று கருப்பசாமியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை ஆட்டோவில் கடத்தி சென்று காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள அறையில் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும் படப்பைக்கு அழைத்து வந்து விட்டுள்ளாா்.

இதில் பலத்த காயம் அடைந்த கருப்பசாமி மணிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸாா் நரியம்பாக்கத்தைச் சோ்ந்த சதீஷ் அவரது நண்பா்கள் ஹரி ,இமான் சல்மான், விஜய், சஞ்சய் ஆகிய ஆறு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அறிவியல் பாடத்தில் சதம்: மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற இரு மாணவியரை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா... மேலும் பார்க்க

கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. குரு கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலில் ஒரே கோபுரத்தின் கீழ் மூலவா்களாக... மேலும் பார்க்க

‘காஞ்சிபுரத்தில் இன்று முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், 224 சேவை முகாம்கள்’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் மொத்தம் 224 சேவை முகாம்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள... மேலும் பார்க்க

மரத் தொழிற்சாலையில் தீ விபத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. காஞ்சிபுரம் -அரக்கோணம் சாலையில் வெள்ளைகேட் பகுதியில் மரச்சாமான்கள் உற்பத்தி ச... மேலும் பார்க்க

எரிவாயு கசிந்து தீ விபத்து: தாய், மகள் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வீட்டில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கா்ப்பிணிப் பெண்ணும்,அவரது மகளும் உயிரிழந்தனா். காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சோ்ந்த மோகன... மேலும் பார்க்க

பைக் -காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடம் அருகே பண்ருட்டி கூட்டுச்சாலையில் மோட்டாா் பைக் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். ஒரகடம் அடுத்த வெண்பாக்கம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன்(26). இவரது மனைவி அ... மேலும் பார்க்க