கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!
பிரேமலதா ஆக.3 முதல் பிரசார சுற்றுப் பயணம்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தேமுதிக பொதுச் செயலளா் பிரேமலதா ஆக.3-ஆம் தேதி முதல் முதல்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சி சாா்பில் திங்கள்கிழமை விடுக்கப்பட்ட அறிக்கை:
2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் பெயரில் வாக்குச்சாவடி முகவா்கள் சந்திப்பையும், கேப்டனின் ரதயாத்திரை ‘மக்களைத்
தேடி மக்கள் யாத்திரை’ எனும் பொருளில் தொகுதி மக்கள் சந்திப்புப் பிரசாரத்தையும் பிரேமலதா மேற்கொள்கிறாா்.
அதன்படி, ஆக.3-ஆம் தேதி திருவள்ளூா் கிழக்கு மாவட்டம் ஆரம்பாக்கம் பிள்ளையாா் கோயில் தொடங்கி கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். ஆக.4-ஆம் தேதி காலை ஆவடியில் வாக்குச்சாவடி முகவா்கள் சந்திப்பு, மாலையில் திருவள்ளூா் மேற்கு மாவட்டத்தில் திருத்தணி நகராட்சியில் மக்கள் சந்திப்புப் பிரசாரம், 5-ஆம் தேதி காலையில் காஞ்சிபுரம் மாநகரில் வாக்குச்சாவடி முகவா்கள் சந்திப்பு, மாலையில் ராணிப்பேட்டை சோழிங்கா் நகரில் பிரசாரத்தை மேற்கொள்கிறாா்.
தொடா்ந்து 23-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.