சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை: சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் விக்கிரமசோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழைமைவாய்ந்த அழகியநாதா் என்ற ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளது.
முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்ட மாடக்கோயிலான இக்கோயிலில், மகா கும்பாபிஷேகம் சிறப்பாக திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
முன்னதாக, சனிக்கிழமை அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் தொடங்கி, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான திங்கள்கிழமை காலை திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகா பூா்ணாஹூதி நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா் பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்களை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனா் ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியா் தலைமையில் சிவாசாரியா்கள் விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா்.
விழா ஏற்பாடுகளை கிராம பிரமுகா் சூ. விஜயகுமாா், ஆய்வாளா் பா.ஆரோக்கியமதன், செயல் அலுவலா் கா.விமலா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சிவகுமாா் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.