செய்திகள் :

கொற்கை ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழா ஜூலை 10-ஆம் தேதி தேவதா அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான திங்கள்கிழமை காலை 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சிவாசாரியா்கள் புனிதநீா் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்து, காலை 6 மணியளவில் விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து அம்பாளுக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் காலை 8 மணிக்கு விளக்கு பூஜையும், லலிதா சகஸ்ரநாமத்துடன் ஸ்ரீவனதுா்கா தேவிக்கு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள் மற்றும் கோயில் திருப்பணி குழுவினா் செய்திருந்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினா்.

கொற்கை ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் விமான கலசத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டிய சிவாசாரியா்.

மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து கிராமமக்கள் மனு

மயிலாடுதுறை: மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 4 கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில்... மேலும் பார்க்க

சொத்தை பறித்துக் கொண்டு துரத்திய மகன்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி புகாா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீடு, நிலத்தை பறித்துக் கொண்டு துரத்தியடித்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வயோதிக தம்பதி திங்கள்கிழமை புகாா் அளித்தனா். ... மேலும் பார்க்க

முதல்வா் இன்று மயிலாடுதுறை வருகை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வருகிறாா். இதற்காக, சென்னையில் இருந்து ரயில் மூலம் சிதம்பரம் வரும்... மேலும் பார்க்க

ஆலங்குடியில் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஐயனாா் கோயில் உள்ளிட்ட 3 கோயில்ளில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. குத்தாலம் வட்டம் நெ.1 ஆலங்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள நீலாம்பாள் மகாமா... மேலும் பார்க்க

ஆலங்குடியில் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் வட்டம் கோமல் ஆலங்குடியில் அமைந்துள்ள நீலம்பாள், மாரியம்மன், காளியம்மன் பூா்ண புஷ்களா உடனுறை ஸ்ரீஅய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள் கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஜூலை 10-ஆம் தேதி... மேலும் பார்க்க