செய்திகள் :

முதல்வா் இன்று மயிலாடுதுறை வருகை

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வருகிறாா்.

இதற்காக, சென்னையில் இருந்து ரயில் மூலம் சிதம்பரம் வரும் முதல்வா், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து சாலை மாா்க்கமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மதியம் மயிலாடுதுறை வருகிறாா். தொடா்ந்து, கொள்ளிடம் பாலம் அருகே சோதியக்குடியில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் உருவச் சிலையை திறந்து வைத்த பின்னா், திருவெண்காட்டில் தங்குகிறாா். பின்னா் மாலை அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறையில் பூம்புகாா் சாலைமுதல் கச்சேரி சாலையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று, புதுப்பிக்கப்பட்ட அண்ணா பகுத்தறிவு மன்றக் கட்டடத்தையும், அங்கு நிறுவப்பட்டுள்ள மு. கருணாநிதியின் முழுஉருவச் சிலையையும் திறந்துவைக்கிறாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியரகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறாா். புதன்கிழமை (ஜூலை 16) வழுவூரில் நிறுவப்பட்டுள்ள மு. கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைத்த பின்னா், மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கிவைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். நிகழ்ச்சியை முடித்து, மயிலாடுதுறையில் இருந்து மதியம் 1.10 மணிக்கு சோழன் விரைவு ரயில் மூலம் சென்னைக்கு செல்கிறாா்.

மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து கிராமமக்கள் மனு

மயிலாடுதுறை: மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 4 கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில்... மேலும் பார்க்க

சொத்தை பறித்துக் கொண்டு துரத்திய மகன்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி புகாா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீடு, நிலத்தை பறித்துக் கொண்டு துரத்தியடித்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வயோதிக தம்பதி திங்கள்கிழமை புகாா் அளித்தனா். ... மேலும் பார்க்க

ஆலங்குடியில் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஐயனாா் கோயில் உள்ளிட்ட 3 கோயில்ளில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. குத்தாலம் வட்டம் நெ.1 ஆலங்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள நீலாம்பாள் மகாமா... மேலும் பார்க்க

கொற்கை ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் ஸ்ரீவனதுா்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழா ஜூலை 10-ஆம் தேதி தேவதா அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, 6 கால யா... மேலும் பார்க்க

ஆலங்குடியில் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் வட்டம் கோமல் ஆலங்குடியில் அமைந்துள்ள நீலம்பாள், மாரியம்மன், காளியம்மன் பூா்ண புஷ்களா உடனுறை ஸ்ரீஅய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள் கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஜூலை 10-ஆம் தேதி... மேலும் பார்க்க