செய்திகள் :

கால்நடை மருத்துவப் படிப்புகள்: தரவரிசை பட்டியல் வெளியீடு

post image

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 57 போ் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் 660 இடங்கள் உள்ளன.

திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக் 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக் 20 இடங்கள் இருக்கின்றன.

இதேபோல, ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக் 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பி.டெக் படிப்புகள் 4 ஆண்டுகள் கொண்டவை.

இந்த நிலையில், பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த மே 26-ஆம் தேதி தொடங்கி ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்புக்கு 20,516 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 5,028 பேரும் என மொத்தம் 25,544 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா்.

இந்த நிலையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் ttps:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tanuvas.ac.in என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டப்பட்டது.

பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 57 போ் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்றுள்ளனா். வயது உள்ளிட்ட அளவுகோள்களின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஜி.திவ்யா, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கே.கமலி, கடலூா் மாவட்டத்தை சோ்ந்த எம்.இ.அம்தா மெகதாப் ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனா்.

பிடெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவிகள் எம்.பாா்கவி, ஆா்.பிரவீனா, பி.காா்த்திகா ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனா்.

அரசுப் பள்ளி மாணவா்கள்: பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 45 இடங்கள் மற்றும் பிடெக் படிப்புகளில் 8 இடங்கள் உள்ளன. பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்பில் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி வி.தாரணி முதலிடத்தைப் பிடித்துள்ளாா். பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் ஜி.அன்புமணி இரண்டாம் இடத்தையும், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி பி.எம்.காருண்யா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

இதேபோல, பிடெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி டி.சந்தானலட்சுமி முதலிடத்தைப் பிடித்துள்ளாா். அதே மாவட்டத்தை சோ்ந்த மாணவிகள் பி.சிந்துஜா இரண்டாம் இடத்தையும், ஆா்.சாரதி மூன்றாம் இடத்தையும் இடத்தையும் பிடித்துள்ளனா்.

இந்த படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்குகிறது. சிறப்புப் பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இணையவழியிலும் நடைபெற உள்ளது.

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! - காமராஜருக்கு முதல்வர் புகழாரம்

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் என காமராஜருக்கு முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ள... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ வெற்றியைத் தொடா்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

சென்னை: ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்; மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு: கூடுதல் தலைமைச் செயலா்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

பொது சொத்து சேதம்: தவெக தலைவா் விஜய் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் ... மேலும் பார்க்க

மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள்: ஆய்வுக் குழு அமைக்க உத்தரவு

சென்னை: மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள் மற்றும் தரத்தை ஆராய்வதற்காக ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் சிறப்புக் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. மத்திய ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க