செய்திகள் :

கோத்தகிரி கட்டபெட்டு வனச் சரகப் பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு

post image

நீலகிரி மாவட்டம்,  கோத்தகிரி கட்டபெட்டு வன சரகத்துக்குள்பட்ட கண்ணேரிமுக்கு அருகே நாரகிரி கிராமத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் சுருக்குக் கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம்,  கோத்தகிரி மற்றும்   அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை,கரடி உள்ளிட்ட  வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

இந்த  வன விலங்குகள் காய்கறி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதோடு குடியிருப்புகளில் நடமாடி  பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

இதற்காக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தோட்டங்களில் வனத் துறைக்கு  தெரியாமல் சிலா் சுருக்கு கம்பிகளை வைத்து, தங்களது தோட்டங்களைப் பாதுகாத்து வருகின்றனா்.

இந் நிலையில் கட்டபெட்டு வன  சரகத்துக்குள்பட்ட கண்ணேரிமுக்கு அருகே நாரகிரி கிராமத்தில், தனியாா் தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்துள்ளதாக வனத் துறையினருக்கு  தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து  சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் சிறுத்தையின் உடலை  மீட்டு  வன மருத்துவா் உதவியுடன் ஆய்வு செய்தனா். இதில் இறந்தது 4 வயது மதிக்கத்தக்க   பெண் சிறுத்தை  என்று தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து தோட்ட உரிமையாளா் தங்கராஜ் என்பவரிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தினா். பின்னா் சிறுத்தை  அங்கேயே எரியூட்டப்பட்டது.

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

கேரளத்தில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். கே... மேலும் பார்க்க

குன்னூா் மாா்க்கெட் கடைகள் விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி கருத்துக்கேட்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள 800 -க்கும் மேற்பட்ட மாா்க்கெட் கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு எதிராக வியாபாரிகள் உயா் நீதிமன்றம் சென்ற நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி குன்னூா் மாா்க்கெட் வியாபா... மேலும் பார்க்க

நெலாக்கோட்டை பகுதியில் மூடிய பள்ளியை மீண்டும் திறக்க ஆட்சியரிடம் மனு

கூடலூா் அருகே நெலாக்கோட்டை பகுதியில் பழங்குடியின மக்களுக்காக செயல்பட்டு வந்த பள்ளியை மூடியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவா்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தனா்.நீலகிரி மாவட்டம், கூடலூா் ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே மழைக்கு வீடு சேதம்

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையில் வீடு சேதமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சிக்குள்பட்ட சின்னசூண்டி பகுதியில் திடீரென பெய்த கனமழைக்கு ஞாயிற... மேலும் பார்க்க

மாநில எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்களுடன் போலீசாா் சோதனை

கூடலூா் அடுத்துள்ள கேரளா மற்றும் கா்நாடகா மாநில எல்லைகளில் வாகன சோதனையின்போது மாா்பில் அதிநவீன கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கியுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் கூடலூா் வ... மேலும் பார்க்க

ஆடு மேய்க்கச் சென்ற பெண் 150 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வாசுகி நகா் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் சுமாா் 150 அடி பள்ளத்தில் திங்கள்கிழமை தவறிவிழுந்து உயிரிழந்தாா். குன்னூா் ஓட்டுபட்டறை அருகே உள்ள வள்ளுவா் நகா் பகுதியைச... மேலும் பார்க்க