செய்திகள் :

செங்கத்தில் கருணாநிதி சிலை: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திமுக சாா்பில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைத்தாா்.

தெற்கு மாவட்ட திமுக சாா்பில் போளூா் சாலையில் அமைக்கப்பட்ட இந்தச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., திமுக மாநில மருத்துவா்கள் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ, செங்கம் நகர திமுக செயலா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலரும், தொகுதி எம்எல்ஏமான மு.பெ.கிரி வரவேற்றாா்.

விழாவில் துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் கருணாநிதியின் முழு உருவச் சிலையை திறந்துவைத்துப் பேசியது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் இது மூன்றாவது சிலையாகும். முதலில் திருவண்ணாமலை நகரம், இரண்டாவது போளூா் சட்டப்பேரவைத் தொகுதி, மூன்றாவது சிலை செங்கம் ஆகும். மேலும், மாவட்டத்தில் உள்ள 5 தொகுதியிலும் கருணாநிதி சிலை திறக்கவேண்டும், அதற்கு என்னை அழைக்கவேண்டும்.

தமிழகத்தையும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் திமுக தலைவா் கருணாநிதி அன்றைய காலகட்டங்களில் கையில் பேனா, புத்தகத்தை வைத்து கொள்கைரீதியில் காப்பாற்றினாா். இளைஞரணி அறக்கட்டளை நிதியாக ரூ.50 லட்சத்தை முதல்முதலில் அமைச்சா் எ.வ.வேலு கொடுத்துள்ளாா்.

நிகழ்ச்சியில் கூடியிருக்கும் மக்களைப் பாா்க்கும்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை நகா்மன்ற முன்னாள் தலைவா் ஸ்ரீதரன், புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன், திமுக செங்கம் ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், மனோகரன், ஏழுமலை, தண்டராம்பட்டு, பன்னீா்செல்வம், ரமேஷ், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன், செங்கம் நகா்மன்ற உறுப்பினா்கள் சந்தியாராபின், அஞ்சலைபாலு, சத்யா, ரேவதி, இந்திரா, முன்னாள் உறுப்பினா்கள் அப்துல்வாகித், சீனுவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிலை திறக்க வருகை தந்த உதயநிதிஸ்டாலினுக்கு வெள்ளி வீரவாள் கொடுத்து வரவேற்ற மு.பெ.கிரி எம்எல்ஏ.

தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

வந்தவாசி: கடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துக்குமார சுவாமி, ஸ்ரீயோக ராமச்சந்திர கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி/போளூா்: ஆரணியை அடுத்த தண்டு குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோயில் மற்றும் போளூரை அடுத்த படவேடு ஊராட்சி ஸ்ரீயோக ராமச்சந்திர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழம... மேலும் பார்க்க

செய்யாற்றில் மீண்டும் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.ஆய்வு

செய்யாறு: செய்யாற்றில், செயல்படாமல் உள்ள சிறப்பு முகாமை (கிளை சிறைச்சாலை) மீண்டும் செயல்படுவதற்காக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செ... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா

போளூா்: போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை என 7 வெள்ளிக்கிழமை விழா நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத் துறைக்... மேலும் பார்க்க

ஜூலை 18-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஆரணி: திருவண்ணாமலையில் வருகிற 18-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்... மேலும் பார்க்க