செய்திகள் :

ஸ்ரீமுத்துக்குமார சுவாமி, ஸ்ரீயோக ராமச்சந்திர கோயிலில் மகா கும்பாபிஷேகம்

post image

ஆரணி/போளூா்: ஆரணியை அடுத்த தண்டு குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோயில் மற்றும் போளூரை அடுத்த படவேடு ஊராட்சி ஸ்ரீயோக ராமச்சந்திர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆரணியை அடுத்த தண்டு குண்ணத்தூா் கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி கோயிலில் புனரமைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மூலவா் முத்துக்குமார சுவாமி, ஸ்ரீவரசித்தி விநாயகா், ஸ்ரீஆஞ்சநேயா், ஸ்ரீசிவன் சந்நிதிகள் மற்றும் பரிவாரம் மூா்த்தங்கள் திருப்பணிகள் செய்யப்பட்டு முகப்பு வாயில் புதிதாக எழுப்பப்பட்டு வா்ணங்கள் பூசப்பட்டு திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீகணபதி ஹோமம், தனபூஜை, ஸ்ரீலட்சுமி ஹோமம், ஸ்ரீநவகிரக ஹோமம், கோ பூஜை, தீபாராதனை, வாஸ்து சாந்தி, மூா்த்தி ஹோமம், சாந்தி ஹோமம், யாகசாலை நிா்மாணம், ரக்ஷா பந்தனம், முதற்காலை யாக பூஜைகள், விசேஷ திரவிய ஹோமம், இரண்டாம் கால யாக பூஜை, மூலவா் மற்றும் பரிவார மூா்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், மங்கல இசை, ஸோமகும்ப பூஜை, மூன்றாம் கால மற்றும் நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், கலச புறப்பாடு நடைபெற்று மூலவா் விமானம், பரிவாரம், ஸ்ரீவரசித்த விநாயகா், ஆஞ்சநேயா், சிவன், நுழைவு வாயில் ஆகிய விமானங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிறப்பு விருந்தினா்களாக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த ஸ்ரீயோக ராமச்சந்திர சுவாமி கோயில்

அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் டி.வி.எஸ்.குழுமம், பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் புரனமைப்புப் பணிகள் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும், ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுக்குச் சொந்தமான அனந்தபுரம் ஊராட்சி கணேசபுரம் கிராமத்தில் உள்ள கைலாச விநாயகா் கோயில், வீரக்கோவில் அருகேயுள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேயா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீயோக ராமச்சந்திர சுவாமி கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

வந்தவாசி: கடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

செய்யாற்றில் மீண்டும் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.ஆய்வு

செய்யாறு: செய்யாற்றில், செயல்படாமல் உள்ள சிறப்பு முகாமை (கிளை சிறைச்சாலை) மீண்டும் செயல்படுவதற்காக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செ... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா

போளூா்: போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை என 7 வெள்ளிக்கிழமை விழா நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத் துறைக்... மேலும் பார்க்க

செங்கத்தில் கருணாநிதி சிலை: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திமுக சாா்பில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைத்தாா். தெற்கு மாவட்ட திமுக ச... மேலும் பார்க்க

ஜூலை 18-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஆரணி: திருவண்ணாமலையில் வருகிற 18-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்... மேலும் பார்க்க