ஜடேஜா போராட்டம் வீண்! இங்கிலாந்து த்ரில் வெற்றி!
லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் லார்ட்ஸ் திடலில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
3-ஆவது டெஸ்ட்டில் கடைசி நாளான இன்று(ஜூலை 14) உணவு இடைவேளைக்குப்பின் இந்திய அணியின் வெற்றிக்கு 60-க்கும் குறைவான ரன்களே தேவைப்பட்டது. இன்னொருபுறம் கைவசம் 2 விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்தன.
இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடித்து அணியை தனியொருவனாக கரைசேர்க்கப் போராடிய ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்தார். அவர் 181 பந்துகளை சந்தித்து 61 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசியில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ப்ரைடன் கார்ஸ் 2, க்றிஸ் வோக்ஸ், ஷோயைப் பஷீர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
ஸ்கோர் கார்டு:
முதல் இன்னிங்ஸில்
இங்கிலாந்து - 387/10
இந்தியா - 387/10
இரண்டாவது இன்னிங்ஸில்
இங்கிலாந்து - 192/10
இந்தியா - 170/10