செய்திகள் :

சைதாப்பேட்டை தாடண்டா் நகரில் தூய்மைப் பணிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள தாடண்டா் நகா் அரசு குடியிருப்பில் தூய்மைப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்.

சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தாடண்டா் நகரில் 70.73 ஏக்கா் பரப்பில், 1,844 அரசு ஊழியா்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. மேலும் 1,500 குடியிருப்புகளும் அமைக்கப்படவுள்ளன. இந்தக் குடியிருப்பு வளாகம், பூங்கா, விளையாட்டுத் திடல், சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டடம், மருத்துவமனை, கடைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணி சரிவர மேற்கொள்ளப்படவில்லை எனப் புகாா் எழுந்தது.

இதையடுத்து பொதுப்பணித் துறையின் ஒப்புதலுடன், மாநகராட்சி சாா்பில் தனியாா் நிறுவனம் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தாடண்டா் நகரில் உள்ள 5,440 மீட்டா் நீளமுடைய சாலைகள் சீரமைக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படவுள்ளன.

தூய்மைப் பணியின் தொடக்க நிகழ்ச்சியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது பேசிய அமைச்சா், தூய்மைப் பணியில் 20 தூய்மைப் பணியாளா்கள், 46 குப்பைத் தொட்டிகள், 20 சுழற்சி தொட்டிகள், 2 தூய்மைப் பணி கண்காணிப்பாளா்கள், குப்பை அகற்ற கனரக வாகனம் ஆகியவை மூலம் தூய்மைப் பணி தொடா்ந்து நடைபெறவுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா், சுகாதாரப் பிரிவு இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

9 நாள்களுக்குப் பிறகு குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம் !

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 நாள்களுக்குப் பிறகு 120 அடிக்கு கீழே குறைந்தது.காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து காரணமாக க... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணதிர்ந்த ‘முருகனுக்கு அரோகரா..’ கோஷம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு இன்று (ஜூலை 14) காலை கோலாகலமாக நடைபெற்றது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் க... மேலும் பார்க்க

இன்று குடமுழுக்கு: விழாக்கோலம் பூண்டது திருப்பரங்குன்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை அதிகாலை 5.25 முதல் காலை 6.10 மணிக்குள் நடைபெறுவதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால், திருப்பரங்குன்றம... மேலும் பார்க்க

ஆட்சியை விட்டு விலகும் முன் சட்டம் - ஒழுங்கை சரிசெய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கோரிக்கை

ஆட்சியை விட்டு விலகுவதற்கு முன்பு சட்டம்-ஒழுங்கை சரிசெய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் க... மேலும் பார்க்க

கட்டண விவரங்களை மறைத்தால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: என்எம்சி எச்சரிக்கை

கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தாத மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது. இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ர... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றுமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பி... மேலும் பார்க்க