செய்திகள் :

கட்டண விவரங்களை மறைத்தால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: என்எம்சி எச்சரிக்கை

post image

கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தாத மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களும் தங்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், வைப்புத் தொகை மற்றும் இதர கட்டண விவரங்களை கலந்தாய்வுக்கு முன்னதாக வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று, பயிற்சி மருத்துவா்களுக்கான ஊக்கத் தொகையை நிலுவை இன்றி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரங்களுக்கு தீா்வு காணும் நோக்கில் உரிய விதிகளின்படியும், நீதிமன்றத்தின் உத்தரவின்படியும் தேசிய மருத்துவ ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அதன்படி, மருத்துவ இடங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் வெளியிடும்போதே, கட்டண விவரங்களையும் வெளியிட வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் அந்த இடங்களுக்கான மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்படாது. அதேபோன்று ஊக்கத் தொகை விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றுதல் அவசியம்.

இந்த விதிகளைப் பின்பற்றாத நிலையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அபராதம் விதிக்கப்படும். மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரமும், மாணவா் சோ்க்கையும் ரத்து செய்யப்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணதிர்ந்த ‘முருகனுக்கு அரோகரா..’ கோஷம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு இன்று (ஜூலை 14) காலை கோலாகலமாக நடைபெற்றது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் க... மேலும் பார்க்க

இன்று குடமுழுக்கு: விழாக்கோலம் பூண்டது திருப்பரங்குன்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை அதிகாலை 5.25 முதல் காலை 6.10 மணிக்குள் நடைபெறுவதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால், திருப்பரங்குன்றம... மேலும் பார்க்க

ஆட்சியை விட்டு விலகும் முன் சட்டம் - ஒழுங்கை சரிசெய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கோரிக்கை

ஆட்சியை விட்டு விலகுவதற்கு முன்பு சட்டம்-ஒழுங்கை சரிசெய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் க... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றுமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பி... மேலும் பார்க்க

ரயில் தீ விபத்தில் புகையால் பாதித்தவா்களுக்கு சிகிச்சை! டிடிவி. தினகரன்

திருவள்ளூா் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின்போது எழுந்த கரும்புகையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் வலியுறுத்தி... மேலும் பார்க்க

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும்! முதல்வர் ஸ்டாலின்

‘காலங்கள் கடந்து வாழும் வள்ளுவா் மறையை இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் நாம் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியாக வேண்டும். இதற்காக திருக்குறளின் சிறப்பை முழுமையாக சொல்லும் வகையிலான மா... மேலும் பார்க்க