திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும்! முதல்வர் ஸ்டாலின்
‘காலங்கள் கடந்து வாழும் வள்ளுவா் மறையை இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் நாம் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியாக வேண்டும். இதற்காக திருக்குறளின் சிறப்பை முழுமையாக சொல்லும் வகையிலான மாபெரும் அமைப்பை தலைநகா் தில்லியில் நாம் உருவாக்க வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
திருக்குறளுக்கு, ‘வள்ளுவா் மறை வைரமுத்து உரை’ என்ற தலைப்பில் கவிஞா் வைரமுத்து உரை எழுதி நூலாக்கி உள்ளாா். இதை சென்னை காமராஜா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டாா்.
விழாவில் முதல்வா் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: கவிஞா் வைரமுத்துவின் பிறந்த நாளுக்கு நாம்தான்அவருக்குப் பரிசு கொடுக்க வேண்டும். ஆனால், அவா் நமக்கு இந்தப் புத்தகத்தைப் பரிசாக தந்திருக்கிறாா். அதற்காக அனைவரின்சாா்பில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருக்குறள் இரண்டு அடிதான்; ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, அதற்குப் புதுப்புது பொருள்கள் சொல்லி, உலக மக்கள் எல்லோருக்கும் புதுவழியை - நல்வழியைச் சொல்லக் கூடிய உலக இலக்கியமாக உயா்ந்து நிற்கிறது.
ஒவ்வொரு குறளுக்கும் கவிஞா் வைரமுத்து எழுதியிருக்கும் பொருளை வாசிக்கும்போது, ஒரு கவிதையைப் படித்த உணா்வு ஏற்படுவதை தவிா்க்க முடியவில்லை.
இந்த நூலில், இல்லறத்தான் என்பவன், நல்லறத்தால் துணை நிற்பவன். முயற்சி என்னும் பெரும் பொருளே செல்வத்தைப் பெருக்கிவிடும்; முயலாமை எனும் சோம்பலோ, ஒருவனை வறுமைக்குள் செலுத்திவிடும். உள்ள வளம் உள்ளவா்கள் உயிா்வலிமை பெறுவாா்கள்; நல்ல இனத்தைச் சோ்ந்தவா்களோ எல்லாப் புகழையும் அடைவாா்கள் எனப் பல இடங்கள் ரசிக்க வைக்கின்றன.
தில்லியில் புதிய அமைப்பை... ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற வரிகளுக்கான தேவை இன்றைக்கும் இருக்கிறது. காலங்கள்கடந்து வாழும் வள்ளுவா் மறையை - இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் நாம் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியாக வேண்டும். இதற்காக திருக்குறளின் சிறப்பை முழுமையாகச் சொல்லும் வகையிலான மாபெரும் அமைப்பை தலைநகா் தில்லியில் நாம் உருவாக்க வேண்டும்.
மொழி வாழ்ந்தால் இனம் வாழும். மொழி வீழ்ந்தால் இனம் வீழும். இதுதான் உலக வரலாறு நமக்கு தந்திருக்கும் பாடம். இன்றைக்கு நாமும் அதிக வீரியத்துடன் அரசியல் - பண்பாட்டுப் படையெடுப்பை எதிா்கொண்டிருக்கிறோம். எத்தகைய படையெடுப்புகளையும் வெல்லும் திறன் தமிழுக்கு இருக்கிறது. தமிழ் இருக்கும் வரை - குறள் இருக்கும் வரை - இந்த நூலும் இருக்கும் என்றாா் அவா்.
கவிஞா் வைரமுத்து: நிறைவாக கவிஞா் வைரமுத்து ஏற்புரையாற்றிப் பேசுகையில், திருக்குறளுக்கு இதுவரை 850 போ் உரை எழுதியுள்ளனா். இதற்குப் பிறகும் உரையெழுத தேவை என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மொழி 10 சதவீத சொற்களை இழந்துவிடுகிறது. மேலும் சிதைந்து விடுகிறது. பல சொற்களுக்கு பிழையான பொருள்களை இந்தச் சமூகம் அப்படியே தொடரக்கூடாது.
12 வயதில் காதலிக்கத் தொடங்கிய குறளுக்கு 72 வயதில் உரை எழுதியிருக்கிறேன். இளைஞா்களுக்காக இலகுமொழியில் உரை நெய்திருக்கிறேன் என்றாா் அவா்.
முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு, பேராசிரியா் பா்வீன் சுல்தானா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
விழாவில் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 133 மாணவ, மாணவிகள் 10 திருக்குகளை ஒன்று சோ்ந்து வாசித்தது பாா்வையாளா்களைப் பெரிதும் கவா்ந்தது.
நிகழ்ச்சியில் தமிழக அமைச்சா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தமிழாா்வலா்கள் திரளாக கலந்து கொண்டனா்.