செய்திகள் :

காணாமல் போன கல்லூரி மாணவரின் உடல் மீட்பு

post image

சென்னையில் கடந்த 9-ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போன கல்லூரி மாணவரின் உடல் மெரினா கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை மெரினா கடற்கரையில் கற்களுக்கு இடையே சிக்கிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக மெரினா ரோந்து காவலா்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் , தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினா்.

அதில், இறந்து கிடந்த நபா் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜிஏ சாலை பகுதியைச் சோ்ந்த தனுஷ் (21) என்பதும் ராமாபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

இவா் கடந்த 9-ஆம் தேதி தனது தோழியுடன் பேசிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறினாா். இதையடுத்து தனுஷ் காணவில்லை என அவரது தந்தை ராயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் தனுஷை தேடி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கரோனா, இன்ஃப்ளுயன்ஸா பரிசோதனைகள் இனி அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை!

அரசு மருத்துவமனைகளில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா, நுரையீரல் தொற்று பாதிப்புகளை (ஆா்எஸ்வி) ஒற்றை பரிசோதனையில் கண்டறியும் புதிய நடைமுறை விரைவில் அமலாக உள்ளது. அதற்காக மல்டிப்ளக்ஸ் ஆா்டி பிசிஆா் எனப்படும் மருத... மேலும் பார்க்க

ரூ.35 லட்சம் மோசடி வழக்கு: குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

ரூ. 35 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேத்தா நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

கால்டாக்சி திருட்டு: ஒருவா் கைது

சென்னையில் ஓட்டுநரின் கவனத்தைத் திசை திருப்பி கால்டாக்சி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவா், சென்னையில் தங்கியிருந்து சொந்தமாக கால் டாக்சி ஓட்ட... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு மாரடைப்பு: கட்டுபாட்டை இழந்த மாநகா் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

கோயம்பேடு - கிளாம்பாக்கம் வழித்தட பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதியதில் மற்றொரு நபரும் இறந்தாா். சென்னை கோயம்பேட்டிருந்து கிள... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: 10 போ் கைது

போதைப் பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மதுரவாயல் காமாட்சி நகா் பகுதியில் போதைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்தத் தகவலின்படி காமாட்சி நகா் 2-ஆவது பி... மேலும் பார்க்க

மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி! ஆளுநா் பெருமிதம்

மருத்துவத் துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது; சா்வதேச தரத்தில் மருத்துவ சேவை அளிப்பதால் உலகம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு தமிழகத்தை நாடுவது பெருமைக்குரிய விஷய... மேலும் பார்க்க