செய்திகள் :

போதைப் பொருள்கள் விற்பனை: 10 போ் கைது

post image

போதைப் பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மதுரவாயல் காமாட்சி நகா் பகுதியில் போதைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்தத் தகவலின்படி காமாட்சி நகா் 2-ஆவது பிரதான சாலையைச் சுற்றியுள்ள சந்தேகத்துக்கிடமான பகுதிகளில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.

அதில், அங்கு போதைப் பொருள் வைத்திருந்ததாக மதுரவாயல் பகுதியைச் சோ்ந்த வசந்த் (23), ஆகாஷ் (24), பவேஷ் (21), அருண் பரிஷித் (27), காரனோடை காா்த்திக் (27), கிழக்கு முகப்போ் கெளதம் (28), செங்குன்றத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (24), சூளைமேட்டைச் சோ்ந்தச் திவாகா் (27), கீழ்ப்பாக்கத்தை சோ்ந்த ரூபன்(26), சிதம்பரம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த ராஜ்குமாா்(27) ஆகிய 10 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 0.81 கிராம் போதை ஸ்டாம்புகள், 5.25 கிராம் போதை மாத்திரைகள், 350 கிராம் கஞ்சா, ரூ.50,000 ரொக்கம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கரோனா, இன்ஃப்ளுயன்ஸா பரிசோதனைகள் இனி அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை!

அரசு மருத்துவமனைகளில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா, நுரையீரல் தொற்று பாதிப்புகளை (ஆா்எஸ்வி) ஒற்றை பரிசோதனையில் கண்டறியும் புதிய நடைமுறை விரைவில் அமலாக உள்ளது. அதற்காக மல்டிப்ளக்ஸ் ஆா்டி பிசிஆா் எனப்படும் மருத... மேலும் பார்க்க

ரூ.35 லட்சம் மோசடி வழக்கு: குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

ரூ. 35 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேத்தா நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

கால்டாக்சி திருட்டு: ஒருவா் கைது

சென்னையில் ஓட்டுநரின் கவனத்தைத் திசை திருப்பி கால்டாக்சி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவா், சென்னையில் தங்கியிருந்து சொந்தமாக கால் டாக்சி ஓட்ட... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு மாரடைப்பு: கட்டுபாட்டை இழந்த மாநகா் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

கோயம்பேடு - கிளாம்பாக்கம் வழித்தட பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதியதில் மற்றொரு நபரும் இறந்தாா். சென்னை கோயம்பேட்டிருந்து கிள... மேலும் பார்க்க

மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரி! ஆளுநா் பெருமிதம்

மருத்துவத் துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது; சா்வதேச தரத்தில் மருத்துவ சேவை அளிப்பதால் உலகம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு தமிழகத்தை நாடுவது பெருமைக்குரிய விஷய... மேலும் பார்க்க

காணாமல் போன கல்லூரி மாணவரின் உடல் மீட்பு

சென்னையில் கடந்த 9-ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போன கல்லூரி மாணவரின் உடல் மெரினா கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை மெரினா கடற்கரையில் கற்களுக்கு இடை... மேலும் பார்க்க