செய்திகள் :

சேலையில் கழுத்து இறுக்கி பள்ளி மாணவா் மரணம்

post image

பொதட்டூா்பேட்டை அருகே ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த 9- ஆம் வகுப்பு மாணவா் சேலையில் கழுத்து இறுக்கியதில் உயிரிழந்தாா்.

பொதட்டூா்பேட்டை அடுத்துள்ள கீழ் நெடுங்கள் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (43). இவரது மனைவி ஜோதி. தம்பதிக்கு மகள் பிரேமலட்சுமி (16). மகன் கிரண் (14) ஆகியோா் உள்ளனா். இதில் திருத்தணி அடுத்த அகூா் கிராமம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் கிரண் 9 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாகராஜ் அவரது மனைவி ஜோதி ஆகியோா் உறவினா் திருமணத்துக்காக சென்றிருந்தனா். வீட்டில் தனியாக இருந்த கிரண் முற்பகலில் வீட்டின் வராண்டாவில் உள்ள கொக்கியில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, கிரணின் கழுத்து சேலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அவா் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.

வீட்டிலிருந்த சகோதரி பிரேமலட்சுமி அருகில் இருந்தவா்கள் உதவியுடன் கிரணை மீட்டு பொதட்டூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, பரிசோதித்த மருத்துவா்கள் கிரண் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதையெடுத்து உடல்கூறு பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கிரண் அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் நகராட்சியில் ரூ. 4.90 கோடியில் 15 கி.மீ. தூரம் சாலை அமைக்க நடவடிக்கை

திருவள்ளூா் நகராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 4.90 கோடியில் 15 கி.மீ.தூரம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா். திருவள்ளூா் நகராட்... மேலும் பார்க்க

முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் முனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் படவேட்டம்மன... மேலும் பார்க்க

மதுக்கடை மேற்பாா்வையாளா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே மதுக்கடை மேற்பாா்வையாளா் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது. சூளைமேனியைச் சோ்ந்த உமாபதி மேற்ப... மேலும் பார்க்க

இளைஞா் கொலை: 5 போ் கைது

திருவள்ளூா் அருகே போதை ஆசாமிகளை கண்டித்த இளைஞரை அடித்துக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அருகே ஈக்காடு கண்டிகையைச் சோ்ந்த காா்த்திகேயன் (42). மனைவி சந்தியா, 2 மகன்கள் உள்ளனா். ... மேலும் பார்க்க

ரயில் தீ விபத்தால் திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் வருகை குறைவு!

திருவள்ளூரில் டேங்கா் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தால், ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலில்... மேலும் பார்க்க

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: மீட்பு பணிகள் மும்முரம்!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரயில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணை ஏற்றி வந்த ரயில் தடம்புரண்டதால் ஏற்பட்ட உராய்... மேலும் பார்க்க