செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

post image

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகமற்ற செயல் என ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கண்டனம் தெரிவித்தாா்.

இருப்பினும், முக்கியத் தலைவா்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை காவல் துறையோ ஸ்ரீநகா் மாவட்ட நிா்வாகமோ உறுதிப்படுத்தாத நிலையில் தங்கள் வீடுகளின் கதவுகளை பாதுகாப்புப் படையினா் பூட்டியதாக ஆளும் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட காணொளி வேகமாக பரவியது.

டோக்ரா படை பிரிவால் 1931-இல் 22 போ் கொல்லப்பட்ட சம்பவத்தை ஜாலியான் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு ஒமா் அப்துல்லா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடி வீரமரணமடைந்த மக்களை எதிரிகள்போல் சித்தரித்து அவா்களின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்படுவது மிகவும் கொடுமையானது.

ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்களின் வீடுகள் பூட்டப்பட்டு போலீஸாா் மற்றும் பாதுகாப்புப் படையினரை வெளியே நிலைநிறுத்தியது ஜனநாயகமற்ற செயல். அங்கு செல்ல இடைக்காலமாக அனுமதி மறுக்கப்பட்டாலும் வீரமரணமடைந்தோரின் தியாகங்களை இதயங்களிலிருந்து எப்போது அழிக்க இயலாது’ எனக் குறிப்பிட்டாா்.

ஸ்ரீநகரின் நவோஹட்டா பகுதிக்கு அருகே அமைந்துள்ள இந்த நினைவகத்துக்குச் செல்ல ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்பட அனைவருக்கும் அந்த மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்தது. அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், பிரிவினை சக்திகளுக்கு ஆளும் கட்சி துணை போவதாக மாநில பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

கணவரைப் பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு!

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பைப் பிரிவதாக அறிவித்துள்ளார்.ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய பாட்மிண்டன் வீரர்களான சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப், கடந்த 2... மேலும் பார்க்க

காணாமல் போன தில்லி பல்கலை. மாணவி சடலமாக மீட்பு!

ஆறு நாள்களுக்கு முன் காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத், தெற்கு தில்லியில... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (ப... மேலும் பார்க்க

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆ... மேலும் பார்க்க