செய்திகள் :

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

post image

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது வருமான வரி ரீஃபண்டாக ரூ.83,008 கோடியை வருமான வரித் துறை திருப்பியளித்தது.

இது தற்போதைய மத்திய பாஜக ஆட்சியில் 2024-25-ஆம் ஆண்டின்போது, திருப்பியளிப்புத் தொகை ரூ.4.77 லட்சம் கோடியாக 474 சதவீதம் அதிகரித்தது.

கடந்த 2013-14-ஆம் ஆண்டு ரூ.7.22 லட்சம் கோடியாக இருந்த மொத்த நேரடி வரி வசூல், 2024-25-இல் ரூ.27.03 லட்சம் கோடியாக 274 சதவீதம் அதிகரித்தது. மொத்த நேரடி வரி வசூல் அதிகரித்துள்ள அதேவேளையில், வருமான வரி ரீஃபண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு 3.8 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இது 2024-இல் 8.89 கோடியாக 133 சதவீதம் அதிகரித்தது. இதற்கு வரி நிா்வாகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களே காரணம்’ என்று தெரிவித்தன.

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (ப... மேலும் பார்க்க

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகம... மேலும் பார்க்க

பாட்னாவில் சுகாதார அதிகாரி சுட்டுக் கொலை: ஒரு வாரத்தில் 4-வது சம்பவம்!

பிகாா் தலைநகா் பாட்னாவில் ஊரக சுகாதார அதிகாரி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். பாட்னாவில் கடந்த ஒரு வாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 4-ஆவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்னாவின் பிப்ரா பகுதியில்... மேலும் பார்க்க

நிபா பாதிப்பு? கேரளத்தில் 2-ஆவது உயிரிழப்பு

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் ‘நிபா’ தீநுண்மி தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது நபா் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னதாக நிபா தொற்றால் பாதிக்கப்பட்ட மலப்புரத்தை... மேலும் பார்க்க